Sunday, January 24, 2021

காதம்பரி/KADAMBARAI/SANSKRIT

             

                                                      காதம்பரி

                "கதாம்பரி'' என்பது பாணபட்டரின் பிறிதொரு நூல் ஸம்ஸ்க்ருத உரை நடை இலக்கியத்தில், இது ஒரு தலை சிறந்த சுவைமிகுந்த நூல். இதன்கண், (1) பூர்வார்தம் (முற்பகுதி) எனவும், (2) உத்தரார்தம் (பிற்பகுதி) எனவும் இரு கூறுகள் உள்ளன. இதனை ஊன்றி ஓதும் ஒருவனும் உவகை உறாமல் இருக்க இயலாது. எவ்வாறு நோக்கினாலும் அதனது பேரெழில், எடுத்துரைக்கும் தன்மையது அன்று பாணர் எதனைத் தொட்டாலும் அதனை அழகுறச் செய்யா மல் விட்டார் என்பதில்லை. வியன்பெரு விந்தியத்தின் கவின் கெழு காடுகளின் வருணனை, சபர-சேனையின் பேரச்சத்தை விளக்கும் சித்திரம், ஜாபாலி முனிவரின் தோற்றப் பொலிவு அவரது தூய இருக்கையின் எழிற்கோலம் என்ற இவை யாவும் இணையற்று இலங்குகின்றன. ஒருவயினே (பக்கத்தில் இடத்தில்), வனங்கள் உபவனங்கள், மலைகள், ஆறுகள் முனிபுங்கவரின் துங்கமான ஆச்சிரமங்கள் என்றவற்றில் வருணகள பொற்புடன் புன்னகை பூத்து பொலிகின் யற்றெருவயினே, சிறப்புறப் பொறிக்கப்பட்டுள்ள, ஹாரீத), ஜாபாலி, தரராபீடன், சுகராசர், மஹாஸ்வேதா, காதம்பரி முதலியோரின் வாழ்க்கை வரலாறும் ஒப்பும் உயர்வும் இல்லாமல் ஒளிர்கின்றது.

   



இப்பெருநூலைப் படித்தபின்னர், பாணபட்டர், கலைமகளின் (சரஸ்வதியின்) பேரருளுக்குப் பாத்திரமான அருங் குமரன் என்பது நன்கு புலப்படும், ஆராய்ச்சித் துறையிற் சிறந்த பண்டைய ஆன்றோரெல்லாம் இதனையே வலியுறுத்தி வந்துள்ளனர். கோவர்த்தனாச்சாரியர் என்பார் பாணபட்ட ரை, கல்விக்கு இறைவியாகிய கலைமகளின் அவதாரம் என்றே கருதுகிறர். அவர், பின்வருமாறு கூறியுள்ளார் : * प्रागरभ्यमचिकमामु बाणो वाणी बभूवेति " । அதாவது, பெரும் - புகழைப் பெறவேண்டும் என்ற தன் பெருவிருப்பினால் வாணி (கமைகள், ஸரஸ்வதி) ஆனவள், பாணரது வடிவத்தை யடைந்தாள்.

                                         கதாஸாரம்

                 விதிசா நகரத்தில், பெரும் பேரும் புகழும் படைத்த சூத்ரகன் என்னுமோர் அரசன் இருந்தான் அவனது பேரவைக்கு, தீண்டாதவர் இனத்தைச் சார்ந்த பேரெழில் படைத்த நங்கை ஒருத்தி, தன்கையில், "வைசம்பாயனன் '' என்னும் பெயருடைய கிளியைத் தாங்கி வருகிருள். கிள்ளையோ மக்களைப் போலப் பேசுகிறது : தன்னுடைய அக் அறிவுரைகளால் கேட்டார் உள்ளங்களைப் பிணிக்கின்றது.

                இக்கிளி, காதம்பரியின் கதையைத் தொடங்குகிறது அதுவோ மிக நீண்டதொரு கதை அதுவும் ஒரு பிறப்பைப் பற்றியதும் அன்று ; சந்திராபீடன், புண்டரீகன் என்றவர் களுடைய தொடர்ச்சியான மூன்று பிறப்புக்களுடன் தொடர்புடையது இக்கதை இக்கதையுடன் வைணம் பாயனனுக்கும் தொடர்பு உண்டு கதையின் போக்கில் ஜாபாலி கூறியதாக, சந்திராபீட மன்னன், அவனது நண்பன் வைஸம்பாயனன் என்றவர்களுடைய கதை வருகிறது. தனது வெற்றிச் செலவிடையே, மன்னன் சந்திராபீடன் இமயமலைப் பிரதேசத்தை யடைகின்றான். அங்கு அவன் கின்னர தம்பதியரைக் காண்கின்றான் ; கண்டு அவர்களைப் பின் தொடர்கின்றான். அக்கின்னா இணை மறைந்துபோய் விடுகிறது. மன்னன், " அச்சோத" என்னும் திவ்யதடா சுத்தையடைகிறான். அண்மையிலிருந்த ஒரு மரத்தில் தன் குதிரையைக் கட்டிவிட்டு, சிவபெருமானது தூய கோயிலை நோக்கிச் செல்கிறான். அக்கோயிலில் வீணாகானம் பண்ணிக்கொண்டிருந்த மஹாஸ்வேதாவைக் காண்கிறான் ; அவளது இனிய இசையைச் செவிமடுத்து, அங்கேயே இனப்பாறத் தங்கிவிடுகிறான். அங்கு மஹாஸ்வேதாவின் பழக்கம் ஏற்படுகிறது ; பின்னர் அவளது தோழி காதம்பரி யைக் கண்ணாரக் காண்கின்றான்.

                 சந்திராபீடனும் காதம்பரியும் தத்தம் எழில் உருவங் களாலும் பிற குண கலங்களாலும் ஒருவர்க்கொருவர் ஈர்க்கப் படுகின்ற னர். எனினும், அவர்களது அன்பு, இறுதி எல்லையை எய்து முன்னரே, மன்னவன், தன் தலைநகரான உஜ்ஜயினிக்குத் திரும்பிச் சென்றுவிடுகிறான். இங்கு மூங்கிலினாலியன் ற வெற்றிலைப் பெட்டியைத் தாங்கும் பத்ர லேகா என்பவள் காதம்பரியின் மெய்க் காதற் செய்தியைத் தாங்கி வருகின்றாள்.

                 இங்கு, இதன் முதற்பகுதி முடிகிறது. இம் முதற்பகுதி முழு நூலின் (2/3) மூன்றில் இரு பங்காகும் முதற் பகுதியை மட்டுமே பாணர் தீட்டினார், எஞ்சிய பிற்பகுதியை, முழு நூலின் மூன்றில் ஒரு பங்கை பாணரின் மகனார் புலிக் பட்டனார் எழுதினார்.

                    இரண்டாவது (பிற்) பகுதியில், சந்திராபீடன், மஹாஸ் வேதாவின் மாட்டுத் திரும்ப வருகிறான். அங்கு அவன் தன் நண்பன் வைஸம்பாயனனுக்கு நேர்ந்த பேரிடர்ப்பாட்டுச் செய்தியை அறிகிறான். வைஸம்பாயனன், மஹாஸ்வேதா வுடன் தன் காதற்றொடர்பினை நாட்ட முயல்கின்றான், ஆனால் அவன் அம்முயற்சியில் வெற்றியைப் பெற்றிலன். அவன் தவக்கோலந்தாங்கியுள்ள மஹாஸ்வேதாவின் சுடுஞ்சினத் திற்குப் பாத்திரமாகி, கிளியின் வடிவத்தை அடைகின்றான். சந்திராபீடன் தன் நண்பனுக்கு உற்ற துன்பநிலையைப் பொறானாய் உள்ளம் உடைந்துத் தன் உடலை நீத்து விடுகிறான், இத்துன்பச் செய்தியைச் செவியுற்ற காதம்பரி ஆண்டுவந்து, சந்திராபீடனின் பிரிவாற்றாமையினாற் பெரிதும் புலம்புகிருள். சந்திராபீடனின் அன்னை விசாலவதியும் தந்தை தாராபீடனும் இப்பரிதாபச் செய்தினால் மிகவும் கைந்து புண்பட்ட உள்ளத்தினர் ஆகின் றனர். இஃதுடன் ஜாபாலியின் கதை முடிவடைகிறது.

                கிளிவடிவத்திலுள்ள தன் நண்பனை (மந்திரிமகனான வைஸம்பாயனன) நாடி, கபிஞ்ஜலன், ஜபாலி முனிவரது ஆச்சிரமத்திற்கு வருகிறான் ; வந்து, தன் நண்பனுக்கு நேரிட்ட துன்பநிலை குறித்து உள்ளம் நொந்து மிக வருந்து கிறான். அக்கிளி, பறந்து சென்று, ஒரு சண்டாளனை அடைகிறது. அதனை, அவன் தன் மகளுக்கு அளிக்கிறான். அச்சண்டாள மகள், அச்கிளியை யுடன் கொண்டு, சூத்ரக மன்னனுடைய அவை (சபை)யை அடைகிறாள். உண்மை யை உற்றுணருங்கால், அச் சண்டாள மகள், புண்டர் கனுடைய தாய், லக்ஷ்மியே என்பது புலப்படாநிற்கும். புண்டரீகன் அப்பிறப்பில் வைஸம்பாயனன், இப்பிறப்பிற் கிளி எனவுங் கண்டு கொள்க.

               சூத்ரக மன்னன், முற்பிறப்பிற் சந்திராபீடன் ஆவான் அவன், முன்னொரு காலத்திற் சந்திரனாய் இருந்து, யாதோ வொரு சாபங் காரணமாக விண்ணுலகம் நீத்து, மண்ணுல கத்திற்கு வரநேர்ந்தது. லஷ்மி மறைந்து விடுகிறாள் ; சூத்ரகனுடையவும் கிளியினுடையவும் சரீரங்கள் கீழே விழுந்துவிடுகின்றன. இதன் விளைவாக, ஆண்டுக் கீழே வீழ்ந்து மாண்டுக் கிடந்த சந்திராபீடனின் உடல் மீண்டும் உயிர்பெற்று எழுகின்றது; புண்டரீகனும் வானத்திலிருந்து புவியில் இழிந்து வருகின்றான்.

             புண்டரீகனும் மஹாஸ்வேதாவும் முகமலர்ச்சியுடன் மன மகிழ்ந்து ஒன்றுபடுகிறார்கள் ; அவ்வாறே சந்திராபீடனும் காதம்பரியும் உள்ளத்து உவகையோடு ஒருமைப்பாட்டை எய்துகின் றனர். இவ்விரு :தம்பதிகளும் தங்காலத்தைக் களிப்புடன் கழித்து மட்டில்லாத மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள்.

வேறு நூல்கள்

             ஹர்ஷ சரிதம் '', "காதம்பரி'' என்றவை போக பாணரியற்றிய இருநாடகங்கள் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று , பார்வதி-பரிணயம் எனப்படும் மற்றொன்று முகுடதாடி தகம்” ( சாக) என்று கூறப்படும்.

              பார்வதி.பரிணயம் என்பது உலகத்துக்கெல்லாம் மாதா - பிதாக்களாகிய பார்வதி - பரமேஸ்வரர்களுடைய புனிதத் திருமணத்தை இனிதாகப் பேசும் அழகிய நாடக மாகும். இந்நாடகத்தில் காளிதாஸருடைய " குமார சம்ப வத்தின் '' தெள்ளிய சாயைகளும் ஒள்ளிய குறிப்புக்களும் காணப்படுகின்றன.

              இது பாணருடைய நூலாகுந் தன்மையுடையது அன் எனவும், பின்னர், இப்புலவர் பெருந்தகையாரின் பெயராகி “பாணபட்டர் " என்ற பெயரையே தனக்கும் பெயராகம் பெற்று, பதினேழாம் நூற்றாண்டிடையே வாழ்ந்த தென்னாட்டுக் கவிஞர் ஒருவரால் இஃது இயற்றப்பட்டதா இருத்தல் வேண்டும் எனவும் சில அறிஞர்கள் கருதுகின்றார்கள்.

               இங்ஙனமே ' முகுடதாடிதகத்தைப் பற்றியும் கல்வியாளர்களிடையே கருத்து வேறுபாடு உளது. எனினும் “நளசம்பு" ("नल चम्पू") விற்கு வரையப்பட்டுள்ள வ்யாக் யாகத்தில் (உரையில்), ஜைனப் புலவர்களான சந்த்ர பாலரும், குணவீஜயமணி என்பாரும், “ இங்நாடகம் பாணர் இயற்றியது 'என்றே கூறியுள்ளனர் இக்கூற்றுக்குச் சான்றாக, அந்நூலிலிருந்து ஒரு செய்யுளும் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது, ஆனால் இதைத் தவிர, * முகுடதாடிதக:" என்னும் நாடகத்தின் பெயர் வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதனை பாணருடைய நூல் என ஏற்றுக்கொள்வது ஐயத்திற்கு இடந்தருவதாகும்.

                  தமது “ ஸம்ஸ்க்ருத இலக்கிய வரலாறு என்னும் நூலில், ஸ்ரீயுத பஏதேவ உபாத்யாய என்பவர், பாணபட்ட ருடைய இயற்கை வருணளையைப் பற்றியும், காதம்பரியின் இலக்கியச்சுவை, உணர்ச்சித் ருறம் என் றவற்றைப் பற்றி யும், பாணரின் நடையின் போக்கைப் பற்றியும் மிக கப் பின்வறுமாறு கூறியுள்ளார்: அழகா

                    இயற்கை வருணனை (காட்சி)

              காதம்பரி "யில் இயற்கைக் காட்சி அருங்கவினை யும் பெருங்களிப்பினையும் ஊட்டவல்லதாய்த் தீட்டப்பட்டுள்ளது. சம்ஸ்க்ருதத்தில், சில கவிஞர் பெருமக்கள், இயற்கை அன்னையின் மதமான, இனிய தோற்றத்தை மட்டும் விளக்குவதில் ஆற்றல் படைத்தவர்களாகக் காணப்படு கிருர்கள் : பின்னுஞ்சில கவிஞர், இயற்கையின் பயங்கரமான தோற்றத்தையும், அச்சத்தை நல்கும் கோலத்தையும் புலப்படுத்துவதிரிலேயே தங்கருத்தைச் களாகக் காணப்படுகிறார்கள். செலுத்தியவர் ஆனால், பாணபட்டரின் மாட்டுக் காணப்படும் தனிப்பட்ட மாண்பு என்னவெனில் இயற்கையின் புன்னகையோடு மிளிரும் இனிய, சௌம்ய, அமைதியான நலங்களையும், அஞ்சா நெஞ்சத்தவரும் அஞ்சத் தக்க கோரக் காட்சிகளையும் அருந்திறம்படத் தீட்டி அதனால், இருவகையிலும் ஒத்த வெற்றியைப் பெறும் பெற்றியது என்க. இவற்றைப் பின்னும் அழகுறவும் திறம்படவும் அமைப்பதற்கு, கவிஞர் பெருமானார், பலதிறப் பட்ட அணிகளின் துணையைப் பேணுகிறார் உவமை தற்குறிப்பேற்றம் (உதப்ரேக்ஷா), முரண், பரிசங்க்யானம் என்ற பல்வகை அணிகளால் ஆக்கப்பட்ட தூணை எழுப்பி, தாம் வருணிக்கப் புகுந்த பொருள்களின் விழுமிய காட்சி யினைக் காண்பார் முன் நிறுத்திக் களிப்பூட்டுகின்றார் கவிஞர் விந்தியக்காடுகளின் நடுக்குறச் செய்யும் தோற்றத்தைத் திறம்படத் தீட்டிய முறை பெரிதும் வியக்கத் தக்கதே.

                 விந்தியக்காடு, ஹிமவானின் மகளாகிய பார்வதியைப் போல, ஸ்தாணுவுடன் கூடியதாகவும் (ஸம்ஸ்க்ருதத்தில் சீஸ்தாணு' என்ற சொல்லுக்கு (1) சிவன் (சங்கரன்) என்றும், (2) மரம் என்றும் இரு பொருள்கள் உண்டு. பார்வதியுடன் சிவபெருமான் இருப்பது போல, விக்தியக்காடு மரங்களுடன் இருக்கிறது என்ற நயம் தோன் றுமாறு கண்டு கொள்க. பிற நயங்களையும் இவ்வாறே உற்றுநோக்கி யுணர்ந்து உவகை பூத்து இன்புறுக.) மிருகபதியினால் (मृगपति:) சிம்ஹம், சிவபெருமான்) சேவிக்கப்பட்டதாகவும் விளங்குகிறது ஜானகியைப் போல லவ-குசங்களை கொடுக்கிறது. (ஜானகியம்மையார் லவ-குசர்களை ஈன்றுள் விந்தியக்காடு "குசம் '' என்னும் தூய புல்லின் ( சிறு துணுக்கு (துண்டுகளை உண்டாக்குகிறது (கொடு கிறது). சீதா பிராட்டியார் நிசாசரர்களால் (அரக்கியர்களால் சூழப்பட்டவராக இருக்கிறார்; அங்ஙனமே விந்தியக்காடும் நிசாசரர்களால் (இரவில் சுற்றித் திரியும் பேய் பிசாசு திருடர்கள் நரிகள், கொடிய பாம்புகள் வற்றல்) சூழப்பட்டதாக இருக்கிறது முதலிய சில சமயங்களில் விந்தியக்காடு, நறுமணம் வாய்ந்த சந்தனம், புனுகு என்ற வற்றை அணிந்து, அகில், திலகம் என்றவற்றைப் பூண்டு காதலனது வருகைக்குக் காத்திருக்கும் காதற்கிழத்தியின் தோற்றத்தை நல்குகிறது. (காட்டிடையே சந்தன மரங்கள் உண்டு : " திலகம் '' என்னும் சொல், (1) நெற்றியில் அணியும் பொட்டு, முதலிய குறிகளையும் (2) மரத்தையும் சுட்டும் இளங்காற்றினால் அசையும் இளந்தளிர்கள் மெல்ல வீசி அக்காதற் கிழத்தியின் களைப்பினைப் போக்கு வது போலக் காணப்படுகின்றன.

                 அமைதியும் ஆனந்தமும் அழகும் சொட்டும் வண்ணம் குறிப்பிடப்பட்டுள்ள ஜாபாலியின் ஆச்சிரம வருணனையைப் படிப்போரின் உள்ளங்கள், தபோவனத்தின் சீரிய தோற்றத் தால் ஈர்க்கப்படாமல் எங்ஙனம் இருக்கமுடியும் ? காவ்யத் திற்கு இன்றியமையாத எல்லா இயல்புகளையும் ஒருங்கே அமைத்து, கவிஞர் நம் கண்களின் முன்னே இணையற்ற இனிய எழிலார்ந்த சித்திரக் காட்சியை யன்றே படைக்கின்றார் வலிமையற்றவர்களாய், விழியிழந்தவர்களாய், துறவியர், வழியறியாது தட்டுத்தடுமாறி ஆச்சிரமங்களின் உள்ளே செல்லும் காலத்திலும், வெளியே வரும்பொழுதி லும், தங் கைகளிற் கோல்களைத் தாங்கி, அவர்களுக்கு வழி காட்டியுநவம் கட்பு கலஞ்சென்ற நாங்குகளின் கோலக் காட்சியை காம் ஒரு காலமும் மறக்கவே இயலாது. परिचित शाखः मृग-कराकृष्ट-यष्टि- निष्कास्यमान प्रवेश्यमानजरदन्धतापसम। ".

               பருவங்களின் வருணனையும் ஆழ்ந்த கருத்துடனேயே செய்யப்பட்டுள்ளது. விடியற்காயுைம் ஞாயிறு மடியும் மாலையும், எங்கும் படரும் இருளும், திங்களின் ஒளியும் இவைபோன்ற பலவகைப்பட்ட இயற்கைக் காட்சிகளும், சீரிய சுவையோடும், கனிந்த கருத்தோடும் உண்மைக்குச் சேரவும் திறம்படக் கையாளப்பட்டுள்ளன.

          அச்சோத (अच्छोद) தடாகத்தின் சித்திரம், பொருள் களைக் கூர்ந்து நோக்கி அவற்றை யுள்ளவாறு உரைக்கும் கவிஞர் பெருமான் பேராற்றலுக்குச் சான்று பகர்கின்றது. காற்றினால் அசைக்கப்பட்ட நீர் அலைத்துளிகளின் மீது சூரியனுடைய கிரணங்கள் படுவதால் எண்ணிறந்த வான வில்கள் எழிலுறத் தோன்றும் என்பதைக் கவிஞர் நன்குணர்வார். கரைகளின் மீது வளர்ந்துள்ள கதம்ப மரங்களிலிருந்து குரங்குகள் தாவிக் குதிப்பதை வருணிப்பது இயல்பான நிகழ்ச்சி . (तट - कदम्ब- हरिकृतजलप्रपात - क्रीडम् ।")

             தடாகத்தின் தெளிவைப் புலப்படுத்த, பாணர், உவமைகள் செறிந்த நீண்டதொரு பங்க்தியை (வரிசையை) நம்முன் நிறுத்துகிறார்.

            " अद्य परिसमाप्तमीक्षणयुगलस्य द्रष्टव्यदर्शनफलम् , आलो कितः खलु रमणीयानामन्तः, दृष्टः आह्लादनीयानामवधि:, वीक्षिता मनोहराणां सीमान्त-लेखा, प्रत्यक्षी कृता प्रीतिजननानां परिसमाप्तिः विलोकिता दर्शनीयानामवसानभूमिः " 


இதைக் காட்டிலும் மகிழ்ச்சியை நல்கும் எழில் வாய்க்க சொற்களின் அமைப்பு வேறு எங்கேனும் காணக்கூடுமோ? 

காதம்பரி - அதன் கலைத்திறன் (கலாபாரம்) (இலக்கியச்சுவை)

               பாணருடைய காதம்பரியில், பலதிறப்பட்ட பொருள்களின் வருணனை, இயற்கையின் அழகான, அஞ்சத்தக்க வருணனைகளைப் போலவே, கருத்தைக் களிப்பித்துக் கரம் கூடியதாகக் காணப்படுகிறது. தம்முடைய வருணனைகள் சாய தோற்றமுடையவைகளாகவும், கன்கு இணைக்கப்பட்ட வைகளாகவும் அமைய வேண்டியும், தம்முடைய ரபாலக் களுக்குச் செழுமையூட்டவேண்டியும், பாணர், உவமை உத்ப்ரேக்ஷை, சிலேவை, விரோதாபாஸம் போன்ற அணிகளைத் திறம்பட அமைத்துள்ளார். எனினும், அவர், பரிஸங்க்யானம் என் னும் அணியைக் கையாளுவதில், தலைசிறந்தவர் (கைதேர்ந்தவர்) ஆகக் காணப்படுகிறார், பரிஸங்க்யானத்தை ஸ்லேஷையோடு எத்துணைத் திறமை யோடு பாணர் பயன்படுத்தியுள்ளாரோ அத்துணைத் திறமை யோடு நயந்தோன்ற வேறெந்தக் கவியாவது கையாண்டுள் ளாரோ என்பது பெரிதும் ஐயத்திற்கு இடமானதே. அணி களின் ஆட்சிமுறை பாணரது உரை நடைக்குத் தனிப்பட்ட உணர்ச்சி, உயிர், ஒளி என் றவற்றை அளித்துள்ளது, தமது “ ஹர்ஷ சரிதத்தில் "பாணரே குறிப்பிட்டாங்கே ஒரு சிறந்த (எடுத்துக்காட்டாக இலங்கும்) நூலுக்கு அமைய வேண்டிய எல்லா இயல்புகளும், இவருடைய உரை நடை நூலிடையே தெள்ளத் தெளியக் காணப்படுகின்றன. புத்தம் புதிய பொருள்களை (அர்த்தங்களை) நல்க வல்ல சீரிய சொற்களின் சேர்க்கை, வாழ்க்கையோடு பொருந்திய பொருள்களைப் புகலப் பயன்படுத்தும் விழுமிய மொழிகள் தெள்ளிய ஸ்லேஷைகள், ரஸங்களரின் கம்பீரமும் தெளிவும் உடைமை, கன்மொழிகளைப் புணர்த்தும் எழிலுடைமை என்றவையெல்லாம்  காதம்பரியை ரசங்களின் சீரிய  இருப்பிடமாக, எடுக்க எடுக்கக் குறையாத கருவூலமாக (பொக்கிஷமாக) ஆக்கியுள்ளன. அவர் ஸ்லேஷா அணியைக் கையாளும் திறமை, சம்பகமலர்களோடு மல்லிகை மலர்களையும், இணைத்துக் கோத்த மலர்மாலையைப் போல, உள்ளத்திற்குப் பேருவகையை ஊட்டுவதாகும் : निरन्तरं पधना: सुजातयो महास्रजश्चम्पक- कुड्मलैरिव". " ரஸநோபமா " ("रसनोपमा") இதற்கு, இது எவ்வளவு இன்பந்தரும் எழிலுடைய எடுத்துக்காட்டு (உதாரணம்) ஆகின்றது:

                     "क्रमेण च कृतं मे वपुषि, वसन्त इव मधुमासेन, 

                       मधुमास इव नवपल्लवेन, नवपल्लव इव कुसुमेन, 

                       कुसुम इव मधुकरैण, मधुकर इव मदेन नवयौवनेन प्रमदम् ॥"


பரிஸங்க்யானம் என்னும் அணியைப் பாணர் எத்துணைத் திறம்பட ஆண்டுள்ளார் என்பதற்கு ஏற்ற இனிய எடுத்துக்காட்டு, ஜாபாலி முனிவரின் தூய இருக்கை யைக் கூறுங்கால், அவர் தீட்டித் தந்துள்ள அழகொழுகும் சித்திரமே ஆகும். அது பின்வரும் மேற்கோளினால் இனிது புலப்படும். அப்பகுதி கற்றறிந்த கவிஞர், புலவர் பெருமக்கள் உள்ளங்களுக்குக் கழிபெருங் களிப்பைப் பல்காலும் நல்காமல் எவ்வாறு இருத்தல் இயலும்?

   "यत्र च महाभारते शकुनिवधः पुराणे वायुप्रलपितम्, वैयः- परिणामे द्विजपतनम् , उपवन-चन्दनेषु जाड्यम्, अदीनां भूति मत्वम् , एणकानां गीत-व्यसनं, शिखण्डिनां नृत्यपक्षपातः, भुजङ्ग- मानां भोगः, कपीनां श्रीफलाभिलाषः, मूलानामघोगतिः ।"

             மஹாபாரதத்தில் சகுனி கொல்லப்பட்டான், (வேறெங்கும் பறவைகளின் கொலை நிகழவில்லை (1) शाकुनि :  துரியோதனன் முதலியோரின் தாய்மாமன், (2) : பறவை. இவ்வாறே वायु: द्विजः முதலிய சொற்களின் இரு பொருள்களைக் கண்டு கொள்க.) (வாயு) புராணத்தில் வாயுவின் (வாதத்தின், காற்றின்) பிறப்பு கூறப்பட்டுள்ளது (கை-கால் பிடிப்பு போன்ற வாத-ரோகத்தினால் பீடிக்கப்பட்டு ஆற்றொணாத் துயரால் அரற்றுவார் ஒருவருமிலர்), முதுமைப் பருவத்தில் மட்டுமே (இருபிறப்புடைய) பற்கள் விழுதலைப் பெறுகின்றன (இரு பிறப்புக்களுடைய அந்தணர் முதலியோர் தம்முடைய உயர்ந்த நிலைகளில் இருந்து நழுவி விழுவதில்லை, ஏனெனில் ஒரு பொழுதும் அவர்கள் அற ஒழுக்கத்தினின்றும் வழுவாமல், தமக்கு உரிய ஒழுக்கநெறி நின்று விழுப்பத்தைப் பெறுகின் றனர்), மடிமை (சோம்பேறித்தனம்) என்பது வனத்திடையேயுள்ள சந்தன மரங்களிடத்தே காணப்படும் (வெறெங்கும், யார் மட்டும் மடிமைத் தன்மை காணப்படவில்லை), சாம்பலைப் பூசுவது நெருப்பிடையே தான் (வேறெங்கும் இல்லை), இசையைக் கேட்குந் துன்பம் (தீய பழக்கம் மான்கள் மாட்டே (வேறு யாண்டுமில்லை), மயில்கள் தோகை விரித்து ஆடுங்காலத்து அவற்றின் இறகுகள் விழுந்தன (வேறு ஒருவர்க்கும் நாட்டியத்தில் சிறப்பான நாட்டமில்லை, அதனால் தம் நிலை குலையும் வாட்டமு மில்லை) பாம்புகள் மட்டும் பரந்த படங்களை (भोगः)ப் பெற்றிருந்தன (அறநூல்களால் விலக்கப்பட்ட பொறி-புல இன்பங்களை (भोग:) நுகராதவர்களாய் மக்கள் இருந்தனர்), வானரங்கள் மட்டுமே வில்வப்பழத்தை (श्री फल) விரும்பின (மக்கள் செல்வத்தை, மாறுபடும் அழியும் தன்மைத்தாகிய செல்வத்தை ( श्री फल இலக்ஷ்மியின் பலம், அதாவது செல்வம் விழைந்திலர்), கீழ்நோக்கிச் செல்லுதல் (अधो गति :) என்பது மரங்களுடைய வேர்களின் தொழில் (மக்கள் கீழ்நோக்கி (நரகத்தை போக்கிச் செல்லவில்லை). "

      காதம்பரி இருதய பஷம் உணர்ச்சியின் திறன்

    (உள்ளத்திற்கு வட்டும் உவகை முதலிய உணர்ச்சி)

               காதம்பரி " நெஞ்சத்தை எவ்வாறு தொடுகின்றது எவ்வித உணர்ச்சிகளை உள்ளத்து எழுப்புகின்றது என்பது சால இன்றியமையாதது. தம்முடைய கதா பாத்திரங்களின் இயல்புகளை யுட்புகுந்து நன்கு உணர்ந்துள்ளார் கவிஞர். பல திறப்பட்ட நிலைகளில் (சந்தர்ப்பங்களில்) உளவாம் அவர்க ளுடைய மனோபாவங்களை (உள்ளத்து உணர்ச்சிகளை)க் கூர்ந்து ஆராய்கிறார் ; ஆராய்ந்து அவற்றை அந்நிலைகளுக் கேற்ற சொற்களைக் கொண்டு விளக்குகிறார். புண்டரீகனைப் பிரிந்துழி, மஹாஸ்வேதையின் உள்ளத்து எழுந்த கோமள நுண்ணிய உணர்ச்சிகளை உள்ளவாறு அழகுறப் புலப் படுத்திய தன்மை, கவிஞர் பெருமானின் எழுத்துவன்மையை விளக்குவதற்கு அமைந்த சிறந்த சான்றாகும். சந்திராபீடன் பிறந்த பொழுது அரச-அரசியர் அகத்தெழுந்த அன்பு கெழுமிய உணர்ச்சிகளைக் காட்டத் தீட்டிய பாணரது சித்திரம், எத்துணை விசித்திரமான (வியக்கத்தக்க)தோ அத்துணை விழுமிய தும் இயற்கைப் பண்புடையதும் ஆகும் சந்திராபீடனை முதலிற் சந்தித்து, அவன் தன்னிருப்பிடத் திற்குத் திரும்பிய பிறகு, காதம்பரியின் கெஞ்சத்தெழுந்த உணர்ச்சிகளை உரைக்கும் முறையொன்றே, மனோபாவங் களைப் பகுத்தறியும் பாணரது ஆற்றலை அறிவிப்பதற்குப் போதிய சான்ருகும்.

               பாணரது கருத்தை உற்றுநோக்கின், " மெய்யன்பு என்பது பொதுவாக உல கிடையே காணப்படும் வெறும் உடலுறு தொடர்பிற்கு மறுபெயர் அன்று என்பதும் பின்னே அது எழுமையும் (ஏழு பிறப்புக்களில் தொடரும் உழுவலன்பு, ஆன்மாவைப் பற்றிய தெய்விக அன்பு என்பதும் இனிது புலப்படும். "காதம்பரி " முற்பிறப்புக்களோடு தொடர்புடைய அன்பினை விளக்கும் செவ்விய சித்திரம், இது (" காதம்பரி), உற்றுணரும் ஞாபசக்தியின் துணை கொண்டு, மறதியினால் மறைப்புண்ட கடந்த காலத்தையும், இயங்குகின்ற நிகழ்காலத்தையும் இணைத்து ஒன்றுபடக் காட்டும் காதற்கதை உண்மை அன்பு என்பது, குலம் (மரபு) சமூகம் என்றவற்றின் மரியாதைகளை (எல்லைகளை, கட்டுப்பாடுகளை)ப் புறக்கணிப்பதில்லை (கடந்து மீறி நடப்பதில்லை என்பதைப் பாணர் தெளிவு படுத்தி யுள்ளார் அது, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் தன்னலமற்றதாகவும் இருக்கிறது. காலத்தின் பெருநிழல் அதனை மறைக்க முடியாது, காலத்தின் கடப்பு (போக்கு அதனை மறுக்கவோ, மாற்றவோ ஆற்றலற்றது. மஹாஸ் வேதா புண்டரீகன் என்பவர்கள் இடையும், காதம்பரி-சந்திரா பீடன் என்பவர்களிடையும் எழுந்த உண்மையான அன்பு என்றும் மாறுபாடில்லாமல் ஒரே படித்தாய் நின்று, பல பிறப்புக்கள் சென்றும் விரும்பிய வண்ணமே முடித்துக் கொள்ள முடிந்தது என்பது சீரிய அன்பிற்கு (காதலுக்கு)ச் சிறந்த, இனிய எடுத்துக்காட்டாகும்.

                 தமது இனிய எழில்வாய்ந்த கதையில், நாமெல்லாங் காண, அமைத்துள்ள அன்பு, புறாழில் காரணமாக எழுகின்ற, பொன்றும் உலகம் போற்றும் பொருள்களைச் சார்பாகக் கொண்ட வெறும் அன்பு அன்று ; பின்னை, ஈருள்ளங்களை ஒருள்ளமாக இடையீடு இன்றி இணைத்து பல பிறப்புக்களிலும் பற்றித் தொடர்ந்து இணையில்லாத இன்பத்தை நல்கும் தனிச் சிறப்பு வாய்ந்த, தெய்வத்தன்மை யுடைய அன்பு ஆகும் காதம்பரியிற் காட்சியளிக்கும் காதல் ஒரு பிறப்பில் இறந்தொழிவதன்று, மூன்று பிறப்புக் களிலும் பல வேறுபட்ட வடிவங்களைப் பெற்றாலும், ஆர்வத் திலும் இனிமை நலத்திலும் ஒரு சிறிதும் குறைபாடுடையது அன்று. உடலால் மாறுபட்ட வடிவங்கள் காணக்கூடும் பண்டை வினைப்பயனாக (தொல்விளைக்கு ஈடாக) ஆன்மாக் கன் வெவ்வேறு கர்ப்பங்களிற் புகலாம், எந்நிலையிலும், அத் தீவிரமான அன்பு இணை பிரியாமல் தொடர்ந்தே வருகின் றது வியக்கத்தக்க இப்பெருஞ் செய்தியின் உண்மையை, காதம்பரியின் கதை ஐயந்திரிபற இனிது விளக்குகின்றது.

                 நிலைத்து நில்லாத இயல்புடைய பொருளின் செல்வி யாகிய லக்ஷ்மியின் குற்றங்குறைகளை, இளவரசனாகிய சந்திராபீடனுக்குத் தெற்றென எடுத்துரைக்கும் பொழுது, சுகநாசர், அரசியல் அறிவு, நற்காவ்யப் பண்பு என்ற இரண்டையும் இனிது புலப்படுத்துகிறார் ரூபகங்களும் உவமைகளும் மிகத் திறம்பட, இனிமையாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனால், பல்வகைச் சிறப்புக்களுடன் கூடிய திருமகளின் திரு உருவம் நம் கண்களின் முன்னர் எழுந்துத் திகழ்கின்றது.

"तथाहीये संबर्धनवारिधारा तृष्णाविषवल्लीनां, व्याधगीतिरिन्द्रिय- मृगाणां, परामर्शूधूमलेखा सच्चरितचित्राणां, विभ्रमशय्या मोहदीर्घ- निद्राणां, निवासजीर्णवलमी धनमदपिशाचिकानां, तिमिरोद्गतिः शास्त्रदृष्टीनां, पुरः पताका सर्वाविनयानामुत्पत्तिनिम्नगा कोधावेग- ग्राहाणामापानभूमिर्विषयमधूनाम् "


"திருமகள் (இலக்ஷ்மி), ஆசையெனும் நச்சு (விஷ)க் கொடி, பச்சை பசேரெனப் படர்வதற்குத் துணை செய்யும் நீரோடை போன்றவள் ; பொறி புலனுணர்வு என்ற மானை எய்த்து ஈர்க்கும் வேட்டுவனுடைய பாட்டு ஆவாள் ; ஒழுக் கத்தால் உயர்ந்தோரின் எழிலுருவ ஓவியத்தை மறைத் தழிக்கும் கரும்புகைப்படர் ; அறிவினை அழித்து நீண்ட மோகத்தூக்கத்தைத் தூண்டும் ஆசை அமளி (படுக்கை); செல்வச் செருக்குருவாம் பேய் பிசாசுகள் பாழிடம் அறநூல்களை யறியவொட்டாமல் வாழ்தரும் கண்ணை மறைக்கத் தோன்றிய திமிரம் (கண்ணோய்) ; பணிவுடைமை சற்றுமில்லாத கொடியவர் ஏந்தியணியும் கொடி ; குரோதா வேசத்தின் (உள்ளங் கவர்ந்தெழுந்தோங்கும் சினப்பரபரப் பின்) வடிவமான : முதலைகள் உறைவிடமாகிய நதி; சிற் றின் பம் என்னும் மதுவைக் குடிப்பதற்கான சாராயக் கிடங்கு (கள்ளுக்கடை)." ரூபகத்தின் சீரிய சிறப்பினால் பெருமையைப் பெறுகின்றது இவ்வருணனை. வேறிடத்தில் விரோதாபாஸம் என்னும் அணியின் செழுமை காணப்படு கிறது. கவியின் கருத்துக்கள் பீடும் பெருமையும் ஏற்றமும் எழிலும் உடையவை இங்ஙனம், செல்வச் செருக்கினால் உளவாகும் பொல்லாங்குகளையும் தீமைகளையும் குற்றங் குறைகளையும் இத்துணைத் தெளிவாக விளக்குவதிலிருந்து கவிஞர் பெருமானின் தீர்க்கதரிசனத் தன்மை, பொருள்களை யுள்ளவாறு கூர்ந்து நோக்கும் நுண்ணறிவு இனிது புலப் படும். மஹாஸ்வேதாவைக் கண்ட மாத்திரையிலேயே, புண்டரீகன் உள்ளத்து எழுந்த நினைவினைப் புலப்படுத்துவது, புலவர் பண்டைய காதல் பெருமானுடைய மக்கள் மனோதத்துவ அறிவுடைமையைக் காட்டப் போதிய சான் நகும். புண்டரீகனின் உள்ளத்தினுள்ளே புதிதாகப் புகவிருக்கும் விருந்தினன் ஆகிய காமதேவனை விரும்பி வரவேற்பதற்காகவே உரோமங்கள் (மெய்) சிலிர்த்து எழுந்து கின் போலும் எனப் புகல்கின்றார் புலவர் பாணர். முனி கையில் கொண்ட ஜமால், நடுக்கம் காரணமாக அசைய (ஆட)த் தொடங்கியது விரதம் பங்கம் ஒருவேளை, அவள் மேற்கொண்டிருந்த (முறிந்துவிடல்) ஆனதைக் கண்டு அவள் அஞ்சியதன் காரணமாகவோ என ஐயுறற் கிடமுண்டு .

         பாணர், சம்ஸ்க்ருத மொழியின் இணையில்லாத முடி யுடைய மன்னர். அவர் ஒப்புமுயர்வுமற்ற சொல்லாற்றல் படைத்தவர். அவரது உரைநடையின் போக்கு வியக்கத் தக்கது சில சமயங்களில், அவருடைய உரைநடை, கற்களோடு பொருது பேரிரைச்சலைச் செய்துகொண்டுப் புரண்டோடிவரும் மழைகாலத்து ஆற்றைப் போல, சொல் லோசையினை யுடையதாகக் காணப்படுகிறது; சில சமயங்களில், அது எவ்வளவு விரைந்து சென்றாலும், குளிர்காலத்து ஆற்றெழுக்கினைப் போல அமைதியாகவும் அழகாவும் காட்சியளிக்கிறது. என்றும் வாடாத புதுமை (இளமை) வற்ருத வளமை, பாணபட்டருடைய வாக்கியங்களிற் காணப்படும் பண்புகள். அவருடைய நூல் முழுவதையும் எவ்வளவுதான் துருவித் துருவி ஆராய்ந்து பார்த்தாலும் பலமுறை அடிபட்டுத் தேய்ந்து மாய்ந்து சுவை இழந்த சொற்களை யாண்டும் காண இயலாது. யாண்டும் புத்தம் புதிய சொல்லாட்சி, புதுப்புதுப் பொருளுடைமை, மறைமுக மாகக் கருத்தையுங் களிதருஞ் சுலைகளையும் புலப்படுத்தும் கிறையொழிகள் என்ற இவையாவும் ஆராய்ச்சியாளர்க்கு ஆராத ஆனந்தத்தை அளிப்பன ஆகும்.

பாணபட்டருடைய காதம்பரியில் ", ஸம்ஸ்க்ருத உரைநடையில் எத்துனை வேகமும் விறுவிறுப்பும் காணக் கூடுமோ, இழுமெனும் இனிய ஓசைபோடு இழிதரும் விழுமிய ஒழுக்கும் எத்துணை எதிர்பார்க்கப்படுமோ, சொல்லும் சுவையும் ஒல்லென ஒளிர எத்துமோ இயலுமோ, அத்துணை யும் ஒருங்கே காணக்கிடக்கும். எனவே, தர்மதாயர் என்ற பண்புடைய ஆராய்ச்சியாளர் ஒருவர், தம் உள்ளத்துப் பொங்கி யெழுந்த மகிழ்ச்சியின் மேலீட்டினால், உள்ள படியே, பாணரை வாயாரவானுறப்  புகழ்ந்துள்ளார் அப்புகழுரை பின்வருமாறு  :- 

" रुचिर-स्वर-वर्णपदा रसभाववती जगन्मनो हरति। 

  सा किं तरुणी ? नहि नहि वाणी बाणस्य मधुरशीलस्य ॥"

             "இழும் எனும் இனிய ஓசை, விழுமிய நிறம் (அல்லது எழுத்துக்கள், वर्ण = நிறம், எழுத்து) அழகிய பாதங்கள் (அடி கள்) என்றவற்றையுடையதும்(அல்லது உடையவளும்), நல் புணர்ச்சி, நற்சுவை (அழகிய அபிநயங்கள்) என்றவற்றைப் பெற்றதும் (அல்லது பெற்றவளும்) ஆன ஒரு பொருள் (ஒருத்தி ) உலகத்தார் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொள்கிறது (அல்லது கொள்கிறாள்); அது (அவள்) எழில் நலம் வாய்ந்த இளநங்கையோ? இல்லை, இல்லை; அது, இனிய இயல்புடைய பாணருடைய சொல்லோவியமாகிய "காதம் பரி” என்னும் நூல்; அவள், இனிய-இயல்புடைய பாணபட்டர் படைத்த "காதம்பரி"


                                     **********************

பாணபட்டர் /Bāṇabhaṭṭa (Sanskrit: बाणभट्ट)

 

                                          

                                                பாணபட்டர்

  பாணரின் முன்னோர்கள்

            மகத நாட்டில் சோணை (the Son) யாற்றங்கரையில், ப்ரீதிகூடம் என்னும் நகரத்தில் பாணபட்டரின் முன்னோர்கள் வசித்துவந்தனர். ப்ரீதிகூடம் என்னுமிடம், பீஹாரின் மேற்குப் பகுதியில் இருந்தது போலும். பாணரின் முன்னோர் கள், கல்வி கேள்விகளாலும் நற்பண்புகளாலும் நிறைந்து விளங்கினர்.

            மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே அவருடைய இல்லம் கல்வி கற்பதற்கு ஏற்ற நிலையமாக இருந்தது வேதங்களையும் தர்மசாஸ்த்ரங்களையும் பயில்வதற்குப் பல்வேறு தூர தேசங்களிலிருந்து இங்கு மாணவர் பலர் வந்த வண்ணமாக இருந்தனர். யஜுர்வேத, சாமவேத மந்த்ரங்களை ஒதுவதினால் உண்டாகும் இனிய நாதம் இவருடைய இல்லத்தில் எப்பொழுதும் ஒலித்துக் கொண் டிருந்தது. இவர்களுடைய வீட்டில் வளர்க்கப்பட்ட பறவை களும் வேத மந்திரங்கள் ஓதுவதை யுணர்ந்திருந்தன (கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதைப்போல) கூட்டிலிருக்கும் நாகணவாய்ப்புள்ளும் (மைனாவும்) கிளிகளுங் கூட, மாணவர் சொற்களைக் கூறும் பொழுது பிழையிழைப் பரேல், அவர்களைத் தலையிற் குட்டித் திருத்துமாம். இதைப் பற்றிப் பாணரே எழுதுகிறார் :

                जगुरगृहेऽभ्यस्तसमस्तवाङ्मयैः ससारिकैः पञ्जरवर्तिमि: शुकरैः ।

               निगृह्यमाणा वटवः पदे पदे यजूंषि सामानि च यस्य शक्विताः ॥

                                                                                                     -(कादम्बरी).

           பாணபட்டரின் தந்தையின் பெயர் சித்ரபானு என்ப தாகும் அவர் சாத்திரங்களை நன்கு பயின்ற புலவர் அவரது கல்வித்திறம் அண்மையிலும் சேய்மையிலும் எங்கும் பரவி யிருந்தது. அவர்களுடைய இல்லத்தில் இல்லாமை என்பதொன்றும் இல்லை அவர்கள் செல்வ முடையவர்களாகவும் இருந்தனர்.



              இளமைப் பருவம்

                 பாணர் சிறுகுழந்தையாக இருக்கும் பொழுதிலேயே அவருடைய தாய்-தந்தையர் அவரைத் தனியே விட்டுவிட்டு வீட்டுலகம் சென்றுவிட்டனர் இல்லத்தில், அவருக்கு இன் மொழி கூறி, சீராட்டிப் பாராட்டுவார் ஒருவரும் இலர். செல்வம் படைத்த சிறுவர் ஆதலின், கட்டுக்கடங்காத காளையைப் போல், பாணர் அங்குமிங்கும், கேட்பாரின்றி, அலையத் தொடங்கினார். விரும்பத்தகாத பழக்கங்கள் பல இவரைப் பற்றிக் கொண்டன. நற்குடியிற் பிறந்தவர் ஆதலின், குலத்தளவே யாகுங்குணங்களுக்கு ஏற்ப, கல்வி கற்கும் கருத்து மட்டும் இவரை விட்டிலது. கல்வி பயில் வதில் இருந்த ஆர்வமும், பல இடங்களுக்குச் செல்வதால் உளதாகும் அனுபவமும் இவருக்குப் பெரிதும் நன்மையைச் செய்தன. அவை, இவரைப் போரறிவாளராகவும் உலகத் தோடு ஒட்ட ஒழுகும் பண்புடையவராகவும் ஆக்கின.

             பாணரை, அவருடைய இழிவான வழிகளின் பொருட்டு பாமரமக்கள் பழித்துப் பகர்வார் ஆயினர். அப்போது அரசு செய்திருந்த ஸ்ரீஹர்ஷர் செவிகளுக்கும் இத்தீய செய்தி எட்டியது.

           ஒருபொழுது, பாணர், அரசனைக் காணச் சென்றுவழி, அவர் அன்போடு மரியாதையாக உபசரிக்கப்படவில்லை என்பதோடு நில்லாது ஓரளவில் அவமரியாதையாக  (இழிவாக) வும் நடத்தப்பட்டார். எனினும், இவரது குலப் பெருமையைக் கருதி, ஹர்ஷர் தமது அவையில் இவருக்கு ஓரிடம் அளித்தார். விரைவிலேயே, பாணருடைய பேரறிவும் புலமைநலமும் நாற்புறமும் பரவிப் பிறங்கலாயின. இதனைக் கண்ணுற்ற அரசன் பெருமகிழ்வு எய்திப் பாணரைத் தம் அருமை பெருமைகளுக்குப் பாத்திரம் ஆக்கினான் முன்ன ரேயே, முன்னோர்களின் செல்வநலத்தைப் பெற்றிருந்தார் பாணர் ; அரசனது அவையில் ஏற்ற இடம் பெற்றமையில் அச்செல்வம் பின்னரும் மிகுந்தது எனவே, வறுமை என்பதை இன்னது என்பதையே யறியார் பாணர். அரசர் களுக்குரிய செல்வச் சிறப்பு நிறைந்த வாழ்க்கையையே எப்போதும் நடத்தினார் பாணர் இளமைப் பருவத்தைக் கடந்து, பாணர் காளைப் பருவத்தை நண்ணிய காலத்தில் நல்வாழ்வின் இனிய வைகறை புன்முறுவல் பூத்தது; அவரை வரவேற்பதற்கு வெற்றித் திருமகள் விருப்புடன் நின்றாள்.

         பாணருடைய நூல்கள்

             பன்னெடுங்காலம் ஸ்ரீஹர்ஷருடைய அவையில் வீற்றிருந்த பிறகு, பாணர் தம் இல்லந் திரும்பினார். மக்கள் அவர் வாயிலாக ஹர்ஷருடைய வாழ்க்கை வரலாற் றைக் கேட்கப் பெரிதும் விரும்பினார்கள். அவர்களின் பொருட்டு, அன்று அவர் தந்த ஹர்ஷரின் வரலாறே, பின்னர் “ ஹர்ஷசரிதம் " எனப் புகழ்ந்து பேசப்பட்ட காவ்யரத்கம் ஆயிற்று. சமஸ்க்ருத ஸாஹித்யத்திற் காணப்படும் பழங் கதைகளில் இதுவே மிகத்தொன்மையானது. அப்பழங் காலத்தில், இழுமெனும் ஒசையும் விழுமிய நடையும் உடைய தாய், (த்வந்த்வ, அவ்யயீபாவ, தத்புருஷ, கர்மதாரய பஹவ்ரீறி என்ற தொகைமொழிகளை (சமாஸங்களை சாலப்பெற்றதாயுள்ள நூலே உரைநூல்களிற் சிறந்ததெனப் பாராட்டப்பட்டது * ओजः-समासभूयस्वमेतद्गयस्य जीवितम् "- ஒள்ளிய சொற்களின் தெள்ளிய நடையும் தொகைமொழி களின் செழுமையுமே உரைநடையின் உயிர்நாடி என்க.




            ஹர்ஷசரிதம்” எட்டுப் பகுதிகளாக (உச்சுவாஸங் களாக)ப் பிரிக்கப்பட்டுள்ளது. உச்சுவாஸம் ' (उच्छवास:) என்னுஞ்சொல், ஒரு தொடர்கதையின் ( आखयायिका) ஒரு பிரிவினை (அத்தியாயத்தைச் சுட்டுவதற்காகப் பயன் படுத்தப்பட்டது (அணியிலக்கண வல்லுநர் எல்லாம் உரைநடை நூல்களை, 'கதை' (कथा) எனவும், ஆக்யாயிகா ( आख्यायिका) எனவும் இருகூறுகளாகக் கொள்கின்றனர். இம்முறையில் அவர்கள் பாணரது " ஹர்ஷ சரிதத்தை ஆக்யாயிகா எனவும், காதம்பரியைக் கதை எனவுங் கருது கின்றனர். எனினும் தண்டி ஆசிரியரும் பிறரும் இத்தகைய வேறுபாடுகளைக் காண்கின்றலர். முதற்பிரிவில், 21 செய்யுட் களினால், பாணர் கடந்தகாலத்துக் கவிஞர்களையும் அவர் களுடைய இலக்கியப் படைப்புக்களையும் பாராட்டுகின்றனர். இத்தகைய வியனுரை (சிறப்புரை) பின்வரும் எழுத்தாளர்க் குச் சீரியதொரு எடுத்துக்காட்டாக இலங்குகிறது.

                   இங்ஙனம், கவிஞர் பெருமக்களையும் அவர்தம் நூல்களையும் பற்றிப் பேசுங்கால், வியாசர், வாசவதத்த, பட்டார ஹரிச் சந்த்ர, சாதவா ஹன, ப்ரவரஸேன, பாஸ, காளிதாஸ பருகத்கதா (பெருங்கதை) ஆசிரியர் போன் றவர்களைப் பாராட்டிப் பாரித்துப் பேசுகின்றார் பாணர்.

                முதல் மூன்று பிரிவுகளில், பாணரது சுருக்கமான வாழ்க்கை வரலாறு காணப்படுகிறது. இதனைச் சுயசரிதை' (आत्म कथा) என்றே நவிலவேண்டும். முதல் உச்சுவாஸத் தின் கண், வாத்ஸ்யாயா (वात्स्यायन) மரபில் இவரது பிறப்பு இவருடைய முன்னோர்களின் வரலாறு, பலதிறப்பட்ட  நண்பர்களுடன் இவருடைய அயல்நாட்டுச் செலவுகள் (பிரயாணங்கள்) முதலியவை கூறப்பட்டுள்ளன. இரண்டாம் உச்சுவாஸத்தில், ஸ்ரீஹர்ஷருடைய சகோதரன் கிருஷ்ண னுடைய பணியாளன் - மேகலகன் " (मेखलक) என் பான், மன்னனைக் காணுமாறு பாணரிடம் அழைப்பிளை க் தெரிவிக்கின் முன் இவ்வழைப்பினை பாணர் விழைந்து ஏற்றுக்கொள்கின்றார். மூன் றிடங்களில் தங்கிப் பிறகு, அஜிர வதி நதிக்கரையில் அமைந்துள்ள மணிதாரா என்னுங் கிராமத்தைப் பாணர் எய்துகிருர். ஸ்ரீஹர்ஷரது சேனை அங்குத் தங்கியிருந்தது. பாணர், மன்னனைக் கண்டு அவனுடைய அன்பையும் பெருமதிப்பையும் பெறுகின்றார் மூன்றாம் பிரிவில், பாணர் தம் இல்லம் வந்தடைகின்றார்; தம்முடைய உறவினர்களுடைய (சிற்றப்பனின் மக்களுடைய) வேண்டுகோட்கு இணங்கி, ஹர்ஷருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூற இசைகின்றார்.

                தொடக்கத்திலே, ஸ்ரீ கண்ட - தேசத்தையும், அதன் தலைநகரான தானேஸ்வரத்தையும் வம்சத்தின் மூல புருஷரான புஷ்பபூதியையும் பற்றிப் பேசுகின்றார். இதன் பின்னர், தாந்திரிக சாதனைகளில் தமக்குத் துணை நின்ற பைரவாச்சாரியாரைப் பற்றிய தெள்ளிய விளக்கம் தருகின்றார் .

                  நான்காம் உச்சுவாஸத்தில், மரபைப்பற்றிச் சுருக்க மாகக் கூறிவிட்டு, இராஜாதிராஜர் ப்ரபாகரவர்த்தனரையும் அவருடைய இராணி யசோவதியையும் குறித்துக் கூறுகிறார் இவருடைய மூத்தமகன் ராஜ்யவர்த்தனனுடைய வாழ்க்கை வரலாறு விரிவாக, சுவைபடத் தீட்டப்பட்டுள்ளது. இதன் பின்னர், ஹர்ஷர், ராஜ்யஸ்ரீ என்றவர்களுடைய பிறப்பு சார்பான குறிப்புக்கள் விளக்கப்பட்டுள்ளன. யசோவதியின் சகோதரன், தன்னுடைய மைந்தன் பண்டி भंडी யை அரசிளங்குமரர்களுக்கு அருந்துணைவன் ஆக்குகின்றான் மெளகரி க்ருஹவர்மாவுடன் ராஜ்யஸ்ரீயின் திருமணம் பேரரசர்களுக்கு உரிய பெருஞ்சிறப்புடன் நடந்தேறியது.

                 ஐந்தாம் உச்சுவாஸத்திலிருந்து. அரசகுமாரர்களுடைய வெற்றிக் கதை தொடங்குகிறது முரட்டு ஹணர்களை வென்று விரட்டுவதற்காக, ஹர்ஷரின் துணை கொண்டு, பெருஞ்சேனை பின் தொடர, ராஜ்யவர்த்தனன் விஜய யாத்திரையாகப் புறப்படுகிறான். ஹர்ஷர், வேட்டையாடக் காட்டிடையே செல்கின்றார். தமது தந்தையார் தீராத நோய்வாய்ப்பட்டுள்ளமை அறிந்து, தலைநகருக்குத் திரும்புகிறார்.

               பிரபாகரவர்த்தனர் இறப்பதற்கு முன்பே, யசோவதி “சதி'' தர்மத்தை மேற்கொண்டு தன்னை மாய்த்துக் கொண்டாள். அவர் இறந்த பிறகு, குடிமக்களெல்லாம் துன்பப்பெருங் கடலில் ஆழ்ந்தனர்.

              ஆறாம் உச்சுவாஸம், ராஜ்யவர்த்தனனின் நாடுதிரும் புகை, துன்பமதைத் தரும் மன்பதைபுரக்கும் பொறுப்பி லிருந்து விடுபட வேண்டி, ராஜ்யவர்த்தனன் முடிதுறந்து தன்னரசுரிமையைத் தன் உடன் பிறந்தான். ஹர்ஷனிடம் ஒப்படைத்தல் என்றவற்றை உரைக்கின்றது. க்ருஹவர்மன் இறந்த செய்தியையும், மாளவ நாட்டு மன்னனின் வஞ்சனை யால் ராஜ்யஸ்ரீ சிறை செய்யப்பட்ட செய்தியையும் செவி யுற்ற ராஜ்யவர்த்தனன், தன் சகோதரியை மீட்பதற்காகத் தன்னந்தனியனாகப் புறப்படுகின்றான். மாளவ மன்னனையும் வெல்கிருன் : எனினும் கெட மன்னனான் சசாங்கனாற் கொல்லப்படுகிறான். தமது சகோதரனுடைய கொலையின் பொருட்டுப் பழிவாங்க வஞ்சினங் கொள்கின்றார் ஹர்ஷர் .

            எழாம் உச்சவாஸத்தில், நஹர்ஷருடைய வீரவெற்றி கணப் பற்றிய சுவைகெழுமிய செய்திகளைத் தருகின்ரும் பாணர். தம்முடைய மாபெருஞ் சேனையுடன் தமது பேராற்றலைப் புலப்படுத்த காற்றிசையிலுஞ் சென்று வெற்றி பெறப் புறப்படுகிஞர் ஹர்ஷர். அத்தருணத்தில், ப்ராக்ஜோ . திஷ வேந்தனான பாஸ்கரவர்மனுடைய தூதனாகிய ஹம்ஸ வேகன் என்பான், மையறு சிறப்பிற் கையுரை (காணிக்கை) எந்தி, பெட்புறும் நட்புச் செய்தியைத் தாங்கி, ஹர்ஷரின் திருமுன்பு வருகின்றான்.

                   தம் தானை யோடு ஹர்ஷர் விந்தியப் பிரதேசத்திற்குச் செல்கிறார் ; மாளவ மன்னனைப் போரில் வெல்கிறார். மாளவ நாட்டுச் சேனை - செல்வங்களின் மீது தனது ஆணை அதிகாரத்தை விதிக்கிருன் பண்டி (भंडी) 

                எட்டாம் உச்சுவாசத்தில், ஸ்ரீஹர்ஷர், ஒரு  சபர இளைஞனின் துணை கொண்டு, நிறைந்த நெஞ்சத்தோடு, தமது உடன் பிறந்தாள் ராஜ்யஸ்ரீயைப் பற்றிய புலனறியப் பெரிதும் முயல்கின்றார். இதற்கிடையே ராஜ்யஸ்ரீ ஆனவள் சிறை யினின்றும் தன்னை த் தானே விடுவித்துக் கொண்டவளாய் விந்தியக் காடுகளினூடே அலைந்து அல்லலுற்றுக் கொண் டிருந்தாள். ஹர்ஷர் திவாகரமித்ரர் என்னும் ஒரு பௌத்தத் துறவியின் இருப்பிடத்தை எய்துகிஞர். ஆண்டு, அப்பொழுது, தன்னைப் புரப்பாரற்று அநாதையாகவுள்ள பெண் ஒருத்தி, கொழுந்துவிட்டு எரியும் தீயிடைத் தன்னை மாய்த்துக்கொள்ளச் சித்தமாயிருக்கிறாள் என்ற செய்தியை, அவர்கட்குத் துறவியொருவன் கூறலுற்றுன். இதனை ச் செவி யுற்ற ஹர்ஷர் அவ்விடத்திற்குக் கடிதிற் சென்று, தம் சகோ தரி ராஜ்யஸ்ரீயைக் கண்டு, அவர்கட்கு ஆறுதல் தேறுதல் அளித்து, அவளை அழைத்துக்கொண்டு, திவாகரமித்திரரின் ஆச் சிரமத்தை அடைகின்றார் அங்கு திவாகரமித்திரர் ராஜ்ய ஸ்ரீயை நோக்கி, ஹர்ஷரைப் போன்ற வாழ்க்கையை மேற்கொள்ளுமாறு உபதேசிக்கின்றார். ஹர்ஷரும், திக் விஜயச் சார்பாகத் தாம் கொண்டுள்ள வஞ்சினம் நிறை வேறிய பின்னர், தூய காவியுடையணிந்து, ராஜ்யஸ்ரீயுடன் துறவறத்தை மேற்கொள்ள இசைகின்றார்.

                  தமது, "சம்ஸ்க்ருத இலக்கிய வரலாற்றில், ஸ்ரீயுத பலதேவ உபாத்தியாய என்பவர், இக்கதையைப் பற்றிப் பின் வருமாறு எழுதியுள்ளார் - "நிரலே வரையப்பட்டுள்ள இச்சுருக்கமான ஹர்ஷசரிதத்" திலிருந்து, வெறும் நிகழ்ச்சிகளையுங் குறிப்புக்களையும், இக்கால முறையை யொட்டி, வரையப்பட்டுள்ள உணர்ச்சியற்ற, சுவையொடு புணராத, வறுநிலம் போன்ற வரலாறு இது அல்ல என்பதும் பின்னர், ஒரு சீரிய இலக்கிய நூலிற்கு இன்றியமையாத இயல்புகளெல்லாம் இனிது அமையப் பெற்றதாய், உணர்ச்சி மீதூர சுவைகெழுமிய, வளமார்ந்த வரலாறு வாய்ந்த நூல் இது என்பதும் தெள்ளித் தெளிய விளங்கும். ஹர்ஷ மன்னரது வாழ்க்கை நிகழ்ச்சிகளை உள்ளவாறு புலப்படுத்த வரலாற்று (சரித்திரக் குறிப்புக்கள் சான்று பகரும் என்பதில் ஐயமில்லை ; எனினும் தமது நூலை அழகுற அமைக்க சிறப்புறச் செய்யத் தம்மாலியன்ற அளவு, கவிஞர், அரும் பாடு பட்டுள்ளார் என்பதைக் கருதவேண்டும். எனவே காவ்யமுறையில் ஆக்கப்பட்டுள்ள இக்கதை, தனிப்பட்ட சீரிய இலக்கிய முறையில் ஒரு காவ்யம் அமைக்கப்பட வேண்டிய நெறிக்கு நேரிய எடுத்துக்காட்டாக இலங்குகிறது என்பது உணரற்பாற்று. பொதுவாக நோக்குமிடத்து இக்காவியத்தில், வீரரசமே தலைசான்ற ரசமாகக் காணப் படும்; எனினும், கருணாரசத்தைத் திறம்படப் புகட்டுவதிலும் பாணர் சிறப்புறத் திகழ்கின்றார் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. இறக்கும் நிலையிலிருக்கும் ப்ரபாகரவர்த்தனனுடைய காட்சி, உள்ளத்தை உருக்கும் தன்மையது. உடையில் சதியின் யசோவதியின் தோற்றமும், அவலகிலையில் அவளது இறுதிப் புலம்பலும் (ஐந்தாம் உச்சுவாஸம்), இராஜ்யவர்த்தனனுடைய துயரும், பாணருடைய காவ்யத் தில், ரசங்கள்(சுவைகள்) செறிந்த பகுதிகளிற் சிறந்தவற்றுட் சிலவாகும்.

              திக்விஜயத்தின் பொருட்டுப் புறப்படும் ஹர்ஷருடைய நிலை உயிரோவியமாக, உணர்ச்சி மிகுந்ததாகக் காணப்படு வதோடு, ஸ்லாநுவபத்துடன் கூடியதாகவும் விளங்குகிறது. ஏழாம் உச்சுவாஸத்தில், மாலைப்பொழுது, வனத்திடையே யுள்ள கிராமம், ஆண்டு அமைந்துள்ள சிற்றில்லங்கள் என்ற வற்றின் வருணனை, வண்ண வனப்புடையதாக, உணர்ச்சி மிகுந்ததாக, உயிரோட்டம் உடையதாகக் காட்சியளிக்கிறது.

               ஹர்ஷரிதம், காவ்யத்தின் கவின் கெழு தன்மைக் காக மட்டும் பாராட்டப்படவில்லை பின்னை நூற்றாண்டில், பாரதநாடு இருந்த எழில்வாய்ந்த, உண்மை ஏழாம் யொடு ஒன்றிய, ஒழுக்க நிலையைத் திறம்படச் சுட்டுகின்றது என்பதற்காகவும் என்க இப்பெருங் காவ்யத்திற் பேசப் படும் ஹர்ஷருடைய வாழ்க்கை - நிகழ்ச்சிகள் யாவும் வரலாற்று (சரித்திர) நூல்களால் அறியப்படுஞ் செய்தி களோடு முரண்பட்டுக் காணப்பட்டில ; அவற்றிற்கு அரண் செய்வனவாகவே இலங்குகின்றன. அக்காலத்துப் பண் பாட்டின் தலைசிறந்த நிலையை உணர்ந்து இன்புறுவதற்கு இக்காவ்யம், அருங்கருவி நூலாகப் பெரிதும் உதவுகின்றது இக்காவ்யத்தின் துணை கொண்டு, அக்காலத்திய பழக்க வழக்கங்கள், நடை-யுடை பாவனைகள், ஆடை அணிகலங்கள், சேனை யின் நிலைமை போன்றவற்றின் உண்மையான வடிவத்தைக் கண்டுகொள்ளலாம்.

               இராஜ்யஸ்ரீயின் திருமணத் திருவிழாவில், பொற்புடை சிற்பக் கலைஞரும் ஓவியக் கலைஞரும், காட்சிகளை வகுப்பதிற் புலப்படுத்திய வியக்கத்தக்க புலமைத்திறமை, கலைநோக்கில் ஈடும் எடுப்பும் இல்லாதது. இது சார்பாக, பெருங்கொடிகள் ET பதாகைகள், தோரணங்கள் என்றவற்றின் பொருட்டுப் பயன் படுத்தப்பட்ட பலதிறப்பட்ட வண்ணத் துணிகளின் வருணனை, உணர்ச்சியூட்டுவதாக, பண்பாட்டைப் புலப்படுத் துவதாக நம் அறிவினை வளர்ப்பதாக விளங்குகிறது இந்நோக்கிலிருந்து ஆராயுங்கால், வரலாற்று (சரித்திர நூல்) ஆசிரியர்களுக்கு, " ஹர்ஷசரிதத்தின் அருமை பெருமை யும் உதவியும் ஊதியமும் எண்ணில் அடங்காதனவாகும்”


                                       *************************

श्री हर्षः - ஸ்ரீ ஹர்ஷர்/SRI HARSHA

 

                                             ஸ்ரீ ஹர்ஷர் ( श्री हर्षः )

                   ஸம்ஸ்க்ருத ஸாஹித்யத்தில், தமது மேதையின் மேம் பாட்டினால், கோகிநூர் வைரத்தைப் போலப் பேரொளியுடன் விளங்கும் ஸ்ரீ ஹர்ஷரின் இடம் மிகப்பெருமைக்கு உரியது என்பதிற் சிறிதும் ஐயமில்லை. கலைமகளின் திருவருளைப் பரிபூர்ணமாகப் பெற்ற இக்கவிஞரிடத்து, தலையாய கல்விச் சிறப்பும் கருவிலே தோன்றிய பேரறிவின் சிறப்பும் தனிப் பட்ட முறையில் இயங்குகின்றன. இவரது இத்தகைய சிறப்பியல்புகளைக் கண்ணுறும் நாம் எய்தும் மகிழ்ச்சியாலும் வியப்பாலும் வாய்வாளாமை மேற்கொண்டு நிற்கின்றோம்.

                   ஸ்ரீ ஹர்ஷர், கல்விகேள்விகளாற் சிறந்த புலவர், பேரறிவு படைத்த இயற்கைக் கவி, யோகி, அரும் பெரும் தெய்விக சக்தி வாய்ந்தவர், தலைசிறந்த தத்துவ ஞானி. எத்துணை தான் துருவித் துருவி ஆராய்ந்து பார் தாலும், இவரையன் றி, மேலே சுட்டப்பட்ட நலங்களெல்லாம் ஒருங்கே வாய்ந்த பெரும் கவிஞர் வேறு ஒருவரைக் காண்டல் அரிது.

                   இக்கவிஞர் பெருந்தகையாரின் தந்தையார் ஹீர என்பவர் : மாமல்ல தேவி என்பது இவரது அன்னையாரின் திருநாமம் இவ்வுண்மை, ஸ்ரீஹர்ஷரின் பெருநூலாகிய நைஷதீய சரிதத்தில் " ஒவ்வொரு சருக்கத்தின் இறுதி யிலுங் காணப்படும் செய்யுட்களின் சில பகுதிகளிலிருந்து நன்கு புலனாகும்.

                श्रीहर्ष कविराजराजिमुकुटालंकारहीग: सुतम् 

                श्रीहीरः सुषुवे  जितेन्द्रियचयं मामल्लदेवी च यम् 

                இவர், மம்மடரின் மருமான் (சகோதரியின் மகன்) என்பதனை யாவரும் நன்கறிவர் கான்ய குப்ஜ அரசரது அவையில் இவருக்குப் பெருமதிப்பு இருந்தது பின் வருஞ் செய்யுட்களினால் இனிது விளங்குமாறு, அங்கு ஏற்ற ஆசனமும், நறுமணஞ் சான்ற வெற்றிலையும் கிடைக்கும் (அதாவது, அவருக்கு வேண்டிய நலங்கள் பலவற்றையும் பெற்றார்.)

                   ताम्बूलद्वयमासनञ्च लभते यः कान्यकुळ्जेश्वरात्

                   यः साक्षाकुरुते समाधिषु परं ब्रह्म प्रमोदार्णवम् ॥

                   यत् काव्यं मधुवर्षिधर्षितपररातर्केषु यस्योक्तयः

                   श्री श्रीहर्षकवेः कृति: कृतिमुदे तस्याभ्युदीयादियम् ॥

                  கான்யகுப்ஜ அரசனான ஜயசந்திரனுடைய அவைக் களத்தை அலங்கரித்தவர் ஆதலின் இக்கவிஞர் பெரு மானின் வாழ்-காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது உறுதிப் படுகிறது. ஒப்புயர்வற்ற தன் ஆற்றலினாலும், துங்கமான கங்கை நதியின் கரையில் ஓராண்டு “ சிந்தாமணி " ஜபஞ்செய்து அதனால் நேராகப் பகவதி த்ரிபுரையின் பேரருளைப் பெற்று அத்தேவியின் கருணைத் திறத்தாலும், தம் தந்தையாரை வாதினில் வென்ற தருக்க சாத்திரச் செருக்குடைய உதயனாசாரியனைத் தோற்கடித்துத் தம் தங்தையார்க்கு ஏற்பட்ட இழிவைப் போக்கினார். அவரது பேரறிவின் மேம்பாட்டினால் கூர்மை யாலும் அவருடைய காவ்யத்தை முதலில் அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் மக்களிடம் இல்லாமல் இருந்தது மறுமுறையும் தவஞ்செய்தமையால், தேவியின் திருவருளால் மக்கள் அவருடைய, நூலை யறிந்துகொள்ளக் கூடியவர்கள் ஆயினர். இதன் பின்னரே, பல துறைகளிலும் வல்லுநராகிய ஸ்ரீ ஹர்ஷர் முன்பு, கற்றுத்தேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இலக்கியப் புலவர்களும் தலையிறைஞ்சி வணக்கஞ் செலுத்தினர். ஸ்ரீ ஹர்ஷர் வெறுங்கவிஞர் மட்டும் அல்லர் : பலதிறப்பட்ட சாத்திரங்களிலும், தத்துவ ஆராய்ச்சியிலும் பல கலைகளிலும் வல்லுநராக இருந்தார். இயல்பில் எழு கின்ற அறிவின் மேம்பாடும் புலமையும் இவரிடத்து இனிமையாக இணைந்திருந்தன இப்பெருங் கவிஞர் காவ்யத்தின் அமைப்பிலும் கடையிலும் வெகுறிபுணர். தம் காவ்யங்களில் அரிய அழகான செஞ்சொற்களைப் பயன்படுத்துபவர். சொற்களையும் பொருள்களையும் ஏற்ற வாறு அமைப்பதில் இவருக்கு இணை எவருமே இல்லை, இவருடைய சொற்கள் புலமை நலம் நிறைந்தவை. வியப் பைத் தரும் தருக்கமுறை செறிந்தவை, ஒன்றுக்கொன்று ஒவ்வாத இரு தன்மைகள் இனிமையாக ஓரிடத்திற் பொருந்தி யிருத்தலையும், மேதையின் மேம்பாட்டையும் ஒருங்கே காண விரும்பின் அவர்கள்,

    (1) இவரது புலமையின் பெருமையை யும், ஆறு தர்சன கரந்தங்களையும் தெள்ளத் தெளிய ஆராய்ந்து அறிந்துள்ள அறிவின் ஆற்றலையும் புலப்படுத் தும் “கண்டன கண்டகாத்தியத்தையும்'' (खण्डन खण्ड खाद्य' ) 

    (2) காவ்யக் கலையின் கோகிநூராகவும், பெருங்காவ்யத்தின் இயல்புகளெல்லாம் இனிமையாக எழும் இடையறாத ஊற்றாக வும் இலங்குகின்ற "நைஷதீய சரிதத்தையும் " नैषधीय चरितम् ' நன்கு கற்பாராக.

             அவரியற்றின நூல்களின் பெயர்களை எல்லாம் அவரது மகா காவ்யமாகிய நைஷதீய சரிதத்திலேயே சுட்டியிருக்கிறார். அவை, 

     (1) ஸ்தைர்ய விசாரப்ரகர்ணம் (स्थेर्य विचार-प्रकरण) 

     (2) விஜயப்ரபாஸ்தி (विजय प्रशस्ति), 

     (3) கண்டன கண்ட காத்திய (खण्डन खण्ड खाद्य), 

     (4) கௌடோர் வீர குல yoivg (गौडोबीशकुलप्रशस्ति),

     (5) அர்ணவ வர்ணனம் (अर्णव वर्णनम् ) 

     (6) சிந்தப்ராஸ்தி (छिन्दप्रशस्ति), 

     (7) சிவ-சக்தி சித்தி (शिव शक्ति सिद्धि). 

     (8) நவஸாஹஸாங்கசரித சம்பு (नवसाहरसाङचरित चम्पू),

     (9) நைஷதீய சரிதம் (नैषधीय चरितम्)) என ஒன்பது நூல்களாகும்.

                  மேலே சுட்டப்பட்ட நூல்களில், "खण्डन खण्ड खाद्य '' என்பது இவருடைய வேதாந்த (சாத்திர) நூல்களிற் சிறந்தது: “नैषधीय चरितम् ", காவ்யங்களுக்கு ஓர் அணிகல மாகத் திகழும் பெற்றியது. (नैषधीय चरितम्)  நைஷதீய சரித் திரத்தில், நிஷதநாட்டு மன்னனான நளனுடைய தூய கதை இனிய முறையில் கூறப்பட்டுளது. இப்பெரிய நூலில், 22 ச சருக்கங்களும் 2830 செய்யுள்களும் இருக்கின்றன இப்பெரிய நூலகத்து, நளன் வேட்டையால் அன்னத்திற் கும் நளவரசனுக்கும் இடையே நடந்த உரையாடல், தமயந் தியின் இடத்து நளனுக்கு அன்னத்தின் வாயிலாக ஏற்பட்ட காதல், பீமராஜன் ஏற்படுத்திய தமயந்தியின் சுயம்வரம் தமயந்தியை மணப்பதற்கு நளனுருவந் தாங்கி தேவர்களும் சுயம் வரத்திற்கு வருதல், திருவருட்குறிப்பினால், தமயந்தி உண்மை நளனை யுணர்ந்து அவனையே மணத்தல், முதலிய கவின் கெழு காட்சிகள், சொற்சுவை பொருட் களுடன் திறம்படத் தீட்டப்படுள்ளன. ("நைடதம் புலவர் சுவை களுக்கோர் ஔடதம் " என்பதனை நோக்குக.)

               கவிஞர் பெருந்தகை ஸ்ரீ ஹர்ஷர் வேதாந்த சாஸ்திரங் களிலும் பேரறிவுபடைத்தவர். அத்வைத மார்க்கத்தைத் தெள்ளத் தெளிய விளக்க வல்ல பேராசிரியர். தருக்க சாஸ்த்ர வல்லுநர்களின் வழியைப் பின்பற்றி இவர் எழுதியுள்ள  खण्डन खण्ड खाद्यम् ) என்னும் நூல் அத்வைத வேதாந்த  நூல்களில் தலைசிறந்ததாகும்.

               பண்டைய பெருங்கவிஞருள்ளே, காளிதாஸரையும் மாகரையுமே பெரும்பாலும் பின்பற்றியுள்ளார் ஸ்ரீ ஹர்ஷர் என்பது எளிதில் உணரற்பாற்று. ஸ்ரீ ஹர்ஷரின் தமயந்தி சுயம்வரம், காளிதாஸரின் இந்துமதி சுயம்வரத்தை அடி யொற்றி யமைக்கப்பட்டுளது. காளிதாஸர் அச்சுயம் வாத்தைக் கூற ஒரு சருக்கம் முழுவதும் எடுத்துக் கொண் டுள்ளார், ஆனால் ஸ்ரீ ஹர்ஷரோ நான்கு சருக்கங்களைக் கொண்டு அப்பணியை முடிக்கின்றார். "நைஷதீய சரிதத் தில்" 19ஆம் சருக்கத்தில் வருணிக்கப்படும் வைகறையை உற்றுநோக்கினால் அஃது எவ்வளவில் மாகரைப் பின்பற்றி இயற்றப்பட்டுளது என்பது விளங்கும் மாகருடைய வைகறை வருணனை இயற்கை எழிலுடையது. ஆனால் ஸ்ரீ ஹர்ஷரின் வருணனையில் உயர்வு நவிற்சியணி அதிச யோக்தி-மிகைப்படுத்திக் கூறல்) மிகுதியாகக் காணப்படு கிறது. ஸ்ரீ ஹர்ஷரின் இந்தச் சருக்கம் முழுவதுமே, மாகரின் ஆம் சருக்கத்திற்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது எனக் கூறுவது மிகவும் பொருத்தமுடையதே யாகும்.


                   ஸ்ரீ ஹர்ஷருடைய நைஷதீய சரிதத்தில் " திட்ப முடைய புலமையும் கூரிய அறிவின் நுட்பமும் ஒருங்கே இனிமையாக இணைந்துள்ளன. ஸ்ரீ ஹர்ஷர், தூய, பண்பட்ட தெள்ளத் தெளிந்த, கல்விநலஞ்சான்ற சொற்களின் தலைவர். வக்ரோக்தியின் (வக்ரோதி சொன்ன சொற்களுக்கு வெவ்வேறு பொருள்களைக் கொண்டு விடைபகர்வதாகிய ஓர் அணி) வாயிலாக எளிய சொற்களை இயக்குவதிற் கைதேர்ந் தவர் மன்னன் நளனுடைய பிரிவாற்றாது, நனிவருந்தி கடைக்கண் நோக்கையுங் கருதற்கு இயலாத கண்களை விளக்குவதற்கு, சிறகிழந்து பறக்க இயலாத வலியனை (வாலாட்டிக் குருவியைப் போல தனது சிற்றிட முற்றத்தே திரும்புவதற்கு முயலும் முடவன் ஒருவனது உவமையை உபயோசித்து, வக்ரோக்திக்குச் சிறந்ததோர் எடுத்துக் காட்டினை நல்குகிறார் கவிஞர் 

                    ஸ்ரீ ஹர்ஷர் கற்பனை க் கடல்: அவரிடத்து, கற்பனைக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை. மகளிரின் வடிவத்தையும் எழிலை யும் தீட்டுவதில் நிகரற்றவர் தமயந்தியின் வடிவழகைப் பேசும் இடந்தொறும் புத்தெழிலை, இளநலத்தைக் காணலாம் கூறியதையே கூறுவதால் தோன்றும் துனிப்பு (வெறுப்பு) இவ்விடத்தில் அறவே எழுவதில்லை ஸ்ரீ ஹர்ஷரின் "நைஷத மகாகாவ்யம் புலவர் பெருமக்களால் கற்று உணர்ந்து களிப்பதற்கு உரியதே யன்றி, மற்றையவரா படித்துப் பாராட்டும் பான்மையது அன்று. பொருளின் போக்கிலும் நோக்கிலும் காளிதாஸரோடு ஷரை ஓப்பிட ஒவ்வாது ஸ்ரீ ஹ கவி ரஸங்களைத் துய்ப்பதிலும் இயற்கையோடு இணந்தொழுகும் தன்மையிலும் தன்ன கரில்லாத் தனிப்பெருங் கவிஞர் காளிதாஸர். ஸ்ரீ ஹர்ஷரோ, எளிதிற் காண்பதற்கு அருமையான நல்லுரைகளைப் பல்லிடங்களிற் பயன்படுத்துபவர் : எழிலுடைய செயற்கை நடை மலிந்த உரிய காவ்யத்தைப் படைக்கும் ஆற்றல் அமைந்தவர். புதிய பொருள்களிற் சொற்களை அமைப்பதிற் சாலவும் வல்லவர்.

                     ஸ்ரீ ஹர்ஷர், இன்பச் சுவையை மிகுத்துக் கூறுங் கவிஞர் ; எனினும் அவருடைய இன் பச்சுவைகள் உள்ளத் திற்கு உவகை ஊட்டுவதை விட, அறிவிற்கே பெருவிருந்து அளிப்பன ஆகும். அவர், விழுமிய சாத்திரங்களையே பற்றித் தொழுது பின் செல்பவர் ஆதலின், ஸ்ரீ ஹர்ஷருடைய நூல்கள் கலையின் திறத்தினை காட்டுகின்றன; உளத் தைத் தொடும் தன்மையைப் பெற்றிலை.

                 பல்வேறு இடங்களில், மிக அருமையான சிலேடைகளை அமைத்து, ஸ்ரீ ஹர்ஷர் தமது பேராற்றலைப் புலப்படுத்து கின்றார்.

                  अस्यां मुनीनामपि मोहमूहे, भृगुमेहान् यत् कुचशैलशीली । 

                 नानारदाहादि मुखं श्रितोरु-व्यासो महाभारत-सर्ग-योग्यः ॥

                                                                        (VII95-नैषधीयचरितम्

               இவ்வாறே, மாலைநேரத்தில் நாற்றிசையிலும் பரவியிருக் கும் இருளைக் கூறும் பொழுது, சொல்லெழிற் சித்தரத்தைத் தீட்டுகிறார் கவிஞர்.

                  ऊर्पितन्युज-कटाह-कल्पे,

                         यद् व्यो म्नि दीपेन दिनाधिपेन ।।

                   न्यधायि तद् भूममिलद् गुरुं,

                         भूमौ तमः कज्जलमस्खलत् किम् ? ॥

                                                                                   (नैषधीय XXII-3)

                 சூரியன் விளக்கிற்கு ஒப்பிடப்படுகிறான். அதற்கு மேலே படிகின்ற மையைத் திரட்டுவதற்குத் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டுள்ள கிண்ணத்தைப் போலக் காணப்படுகிறது விண்ணகம் (ஆகாயம்), அக்கினண்ணத்தில் (விண்ணிடை) நிறைய மை இருத்தலால், அது வழிந்து நிலத்தில் விழுந்து அங்கு இங்கு எனாதபடி எங்கும் பரவுகிறது. உலகத்து நிகழும் சாதாரண நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு, கவிஞர் காட்டும் காட்சி மிகவும் ஏற்றம் உடையதாகவும் இதயத் திற்கு இன்பம் பயப்பதாகவும் உள்ளது.

                   இங்ஙனம், கல்வித்திறம், அருமையான அறிவின் நுட்பம், வருணனைச் சிறப்பு பொருட்செறிவு உடைய அரிய சொல்லாட்சி என்றவற்றிற்கு ஸ்ரீ ஹர்ஷர் பெரும் பெயர் பெற்றவர் இப்பெருங் கவிஞருடைய சிறந்த உவமைகள், இருதயத்திற்கு இன்பம் நல்கும். உருவகங்கள் புலமையைப் புலப்படுத்தும் சிலேடைகள் என்றவற்றை எல்லாம், கல்விநலச் சான்றோர்களும் ஆன்ற ஆராய்ச்சி யாளரும் விரும்பி, வியந்து உவகையில் என்றுந் திளைத்தனர். இனியுற அங்ஙனமே திளைப்பர் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை உலகம் உள்ளளவும்.


                               ****************************

மாகர் (माघः)

   

                                            மாகர் (माघः)

                  ஸம்ஸ்க்ருத ஸாஹித்யம் என்னும் விரிந்த வானகத்தே சுடர்விட்டு இயங்கும் மகாகவியாகிய மாகரை அறியாதவரும் உளரோ? "माघे सन्ति त्रयोगुणा :" என்பது ஸாஹித்தியச் சான்றோர்கள் சாற்றும் போற்றுரை மாகரிடத்தில் உவமை பொருட்பெருமை விழுமிய சொற்களின் பொலிவு " என்ற மூன்று முக்கிய தன்மைகளும் தக்காங்கு அமைந்துள்ளன காளிதாஸரைப் போல அத்துணை அளவில் அத்துணைச் சிறப்பான உவமைகள் காணப்படாம லிருப்பினும், மாகருடைய காவியத்திலும் போதிய அளவில் சிறந்த உவமைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறே, பொருட்செறிவும் புலப்படுகின்றது. விழுமிய சொற்களைப் பயன்படுத்துங் கெழுதகைமை மாகருக்கே உரியது என்பதிற் சிறிதும் ஐயமில்லை. மாகர் அமைத்துள்ள சொற்களின் வைப்பு - முறையை மாற்றியமைக்க முடியாத அளவிற்கு அவை எழிலும் எற்றமுமுடையவை.



                    மாகருடைய தந்தையார் " தத்தகர் என்பவர், பெரும் புலவர், சிறந்த கலைவாணர், வரையாது வழங்கும் வள்ளல் பீன- மால்” என்பதொரு கூர்ஜர நகரத்திற் பிறந்தவர் மாகர். ஒருகாலத்தில், அங்ககர், தலை நகராகவும் கல்வி கேள்விகளிற் சிறந்த நகரமாகவும் விளங்கியது. மாகரின் தந்தைக்குத் தந்தையாகிய சுப்ரபதேவர் (सुप्रदेव:) என்பர் குஜராத்தின் ஒரு பகுதியில் அரசு செய்துவந்த ' வர்மலாத் ' என்னும் மன்னனின் முதலமைச்சராக இருந்தார்.

                   மகாகவி மாகரும், தம் தந்தையைப் போலவே, பரந்த உள்ளம் படைத்தவர் ; தம்மால் வந்தவர்களுக்கு வாரி வழங்கும் சீரிய மனப்பான்மை யுடையவர். மாகர், போஜ மன்னனுடைய நண்பர். மாழைமணிப் பொருள்களை வழங்கி வழங்கி, மாகர் ஏழையான பொழுது, அவரது மனைவி மாகரல் மகாகாவ்யம் சருக்கத்தில் வைகறையை சிசுபால விதத்தில் பதினொராம் விளக்க வரும் कुमुदवनमपश्रि श्रीमदम्भोजपण्डम्  '' எனத் தொடங்குஞ் செய்யுளை எடுத்துக் கொண்டு போஜ மன்னனிடஞ் சென்றாள். அச்செய்யுளை செவிமடுத்த மன்னன் மனமுருகி நிறைய பொன்னைக் கொடுத்துதவினான் ஆனால் அந்நங்கை அத்தங்கைப் பொருளை வழியில் வந்த வறிஞர்களுக்கு வாரி வழங்கிவிட்டு வெறுங்கையினளாகவே இல்லந்திரும்பினாள் வரிசையாக கின்று கொண்டிருந்த வறிஞர்களைக் கண்ணுற்ற கவிஞரது உள்ளம் பெரிதும் புண்ணுற்றது. அத்துன்பங் காரணமாக வே மாகர் மண்ணுலக வாழ்வை நீத்தார். அவருடன் தீயிற் புக்கு அவருடைய மனைவியாரும் மாய்ந்துபோனார். மாகரு டைய வாழ்க்கையில் நடந்த இன்னல் தரும் இந்நிகழ்ச்சி யாவரும் உணர்ந்ததே. இதனை எவ்வளவில் நம்பமுடியும் என்பது எளிதன் று எனினும், மாகர், செல்வம் நிறைந்த அந்தணர் மரபில் தோன்றியவர் என்பதும், தந்தையைப் போலவே தனயனும் தாராள மனப்பான்மை யுடையவன் என்பதும் ஐயத்திற்கு இடமில்லாமல் தெற்றென விளங்கக் கூடியைைவயே.

                                                காலம்

             மாகருடைய காலத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் மிகப் பலவாகும் சிலர், அவர் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்பர் : பின்னுஞ் சிலர் அவரை எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு ஈர்த்துச் செல் கின் றனர். எனினும் பெரும்பாலான மக்கள், அவரை ஏழாம் தாற்றுண்டின் பிற்பகுதினர் என்றே கருத விழை கின்றனர். எனவே அக்கருத்து ஏற்குந் தகையதாகவும் பொருத்தமுடையதாகவும் தோன்றுகிறது.

                                                 நூல்

                மகாகவி மாகர், பல நூல்களை எழுதவில்லை. அவரி யற்றியது. “ சிசுபாலவதம் " என்ற ஒரேயொரு நூலாகும். ஒரு பெருங்காவியத்திற்கு, பலதிறப்பட்ட பருவங்களின் வருணனை, வைகறை, மன்னர்களின் மரபு, சண்டைகள், போர்கள் போன்றவற்றின் விளக்கங்கள் எவ்வாறு இன்றி யமையாதன வோ, அவ்வாறே, இப்பெருங் காவ்யத்திலும் யுதிஷ்டிரர் செய்த இராஜசூய யாகத்தில், ஸ்ரீகிருஷ்ணன் புரிந்த சேதிநாட்டரசனான சிசுபாலனுடைய வதத்தைக் கூறும் மகாபாரதக் கதைப்பகுதி, இருபது நீண்ட சருக்கங் களில் பலதிறப்பட்ட சுவை நிறைந்த நிகழ்ச்சிகளுடன் விரிவாகக் கூறப்பட்டுளது. பல இடங்களில் ஆழ்ந்த அரசியல் அறிவுரைகள் காணப்படுகின் றன; புதிய முறை யில் அணிகள் அழகுற அமைந்துள்ளன களைப் பெரிதும் விழைந்து பேணினார் மாகர், அணி எனவே, அவரது இட்பெருங் காவ்யத்தில், யமகம் ஒத்த ஒலிகளையுடைய எழுத்துக்கள் அல்லது சீர்கள் பொருள் வேறுபடச் செய் புளில் (பின்னும்) வரும் மடக்கு எனப்படும் அணி), சிலேஷை ஒருவடிவமாக நிற்கும் சொற்றொடர் இரண்டிற்கு மேற்பட்ட பொருளுடையதாக வரும் அணி), அனுலோமம், ஏகாக்ஷரம் (உயிரோடு தனித்தும் ஒரே மெய் (எழுத்து வரும் மிறைக்க விடசித்திரக்கவி), சர்வதோபத்ரம் (64 அறைகளுள்ள சதுரமொன்றில், 32 எழுத்துக்களைக் கொண்ட செய்யுள் ஒன்றை இருமுறை எழுதிச் சதுரத்தின் எம்முகத்தினின் றும் தொடங் கின் அது படிக்க வரும்படி அமையும் மிறைக்கவி), பிரதி லோமம், போன்ற பலதிறப்பட்ட அணிகள் (ஒலியையும் பொருளையும் சார்பாகப் பெற்றவை) எண்ணிறந்தவை எடுத்துக்காட்டாக இயங்குகின்றன.

                        மகா கவி மாகர், தமக்கு முன்னிருந்த கவிஞர் பாரவியை விஞ்ச வேண்டுமென நெஞ்சில் நினைந்துப் பெரிதும் முயன்றார் ; அம்முயற்சியில் வெற்றியையும் பெற்றார். பாரவியின் பெருங் காவ்யம்,"श्रियः कुरूणाम धिपस्य पालनीम् ",எனத் தொடங்குவது போலவே, மகாகவியும், தமது மகா காவ்யத்தை, "श्रिय: पतिः श्रीमति शसितुं जगत् " என்ற முதற் செய்யுளில் "श्री" என்னுஞ் சொல்லைக் கொண்டே தொடங் குகிறார். பாரவி பரமசிவ பக்தராதலின், தமது மகாகாவ்யத்தில், சிவபெருமானையே சிறப்பித்துக் கூறியுள்ளார் அங்ஙனமே, மகாகவி மகாவிஷ்ணுவை வழிபடுவோராதலின் திருமாலையே தம் நூலில் பெருமையாகப் பேசியுள்ளார், பாரவி, தமது நூலில், ஒவ்வொரு சருக்கத்தின் இறுதிச் செய்யுளிலும் “லக்ஷ்மி'' என்னுஞ் சொல்லை உபயோகித் துள்ளார் அதைப்போலவே, மகாகவியும், தம் நூலில் ஒவ்வொரு சருக்க இறுதிச் செய்யுளிலும், " ஸ்ரீ: " என்னுஞ் சொல்லையே பயன்படுத்தியுள்ளார். இதனால், " பாரவியைக் காட்டிலும் எவ்வகையிலும் முன்னிற்கவேண்டும், அவரது பொன்றாப் புகழைப் பொன்றும்படி செய்யவேண்டும்” என்ற கருத்துடனேயே, தமது பெருங்காவ்யத்தை இயற்றினார் மகாகவி மாகர் என்பது நன்கு புலப்படுகிறது.

          [ श्रियः पतिः श्रीमति शासितुं जगज्जगन्निवासो वसुदेवसद्मनि ।        

           बसन्ददवितरन्तमम्बराद्धिरण्यगर्भागभुवं मुनि हरिः॥"

                                                                         (1-1) (शिशुपालबधम् । ) ]

                        “மகா-காவ்யம் (சிசுபாலவதம்) "

                  மாகருடைய மகாகாவ்யமாகிய "சிசுபாலவதத்தில் இருபது சருக்கங்கள் இருக்கின் றன. தம் கருத்து முழுவதையுஞ் செலுத்தி, ஒரு மகா காவ்யத்திற்கு இன்றியமையாத இயல்புகளை யெல்லாம் ஒருசேரநன்கு அமைத்துள்ளார்.


சிசுபாலவதத்தின் முதற் சங்கத்தில், 4 சந்தேசம் (செய்தி) கூறப்படுகிறது. இரண்டாம் சருக்கத்தில் அரசியல் நுட்பங்கள் நுவலப்படுகின் றன. பின்னர், பிரயாணம் பேசப்படுகிறது. ஆருஞ் சருக்கத்தில், பருவங்கள் வருணிக் கப்படுகின்றன. நான்காம் சருக்கத்தில் ரைவதக பருவத் தின் சித்திரம் காணப்படும் பின் வருஞ் சருக்கங்களில் பலதிறப்பட்ட ஏனைய பொருள்களோடு, மாலைப்பொழுது இருள், சந்த்ரோதயம், இளநல நங்கையர் நீராடல் முதலியன சுவையொழுகப் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறாம் சருக்கத்தில், சிசுபாலனுடைய தூதனுக்கும் சாத்யகி (aras:) யுக்கும் இடையே காரசாரமான விவாதம் நிகழ்கின்றது பத்தொன்பதாம் சருக்கத்தில், சித்திரப்பந்தங்களினால் போர் சித்தரித்துக் காட்டப்படுகிறது.

             "माघे सन्ति त्रयोगुणा: ''- மாகரிடத்தில், மூன்று பண்புகளுங் காணப்படுகின்றன"- (மூன்று பண்புகள் உவமை, பொருட்செறிவு, சொற்பொலிவு) என்ற உரை ஆதாரம் அற்றதன்று. மனத்தைக் கவரும் மாகருடைய நூலில், பல இடங்களில், இம்மூன்று பண்புகளும் மலிந்து கிடத்தலை நன்குணரலாம். மாகருடைய சொற்கள் மிகவும் பொருத்தமும் பொலிவும் உடையவைகளாக அமைக்கப் பட்டுள்ளன; அவற்றைமாற்றி அவற்றின் இடங்களில் வேற்றுச் சொற்களைப் பொருத்துதல் என்பது இயலாத காரியம், அவருடைய சொல்லாட்சியின் திறத்தை உயர்த் துரைக்காமல் இருக்கமுடியாது. அவை, உண்மையிலே, நம் புகழுக்கு உரியனலே.

                  மாகர், தலையாய கவின் கெழு கவிஞர் மட்டும் அல்லர் அவர் பல நுண் கலைகளையும் கற்றுணர்ந்த பெரும் புலவரும் ஆவர். அறிவின் பலதுறைகளின் மெய்ப்பொருள்களையும் உய்த்துணரும் நுட்பங்களையும் எளிதில் எடுத்துரைக்கும் அவருடைய ஆற்றல் சாலவும் ஏற்றமுடையது. அவருடைய நூலகத்து, விழுமிய வேத-வேதாந்தப் பொருள்களிலிருந்து அரசியலைத் தழுவிய பொருள்கள் வரையிலுள்ள பலதிறப் பட்ட துறைகளில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமையைப் புலப்படுத்தும் சான்றுகள் எண்ணிறந்தன இருக்கின்றன.

                   இவையாவும் அவர் பல்கலைப் புலவர் என்பதனை விளக்கு கின் றன பல இடங்களில், வியாகரணத்தில் தலை சிறார், நூல்களின் குறிப்புக்கள் காணப்படுகின்றன. பலராமன் உத்தவர் என்றவர்களின் வாயிலாக, அரசியல் நுட்பங்கள் வெளியிடுகிறார். நாட்டியக் கலையின் சூல்மமான விஷயங் களைக் காட்டியுள்ளார் அருங்கலைகள் பலவற்றில் பெருர் தேர்ச்சியுடையவர். இசைக்கலை வல்லுநர் என்பது அவர் கூறும் இசை நுணக்கங்களிலிருந்து தெளியப்படும் அணியில் அவருக்கிருந்த ஆற்றல் தலை சிறந்தது; இத்துரை யில் அவருக்கு இணை அவரே அணிக்கு அரசர் என்றே அவரைக் கூறல்வேண்டும். அரசியல் துரையிற் கடின மான வினாக்களையும் இன்னல் தரும் பொருள்களையும் எளிதில் விளக்கும் வகையில் இனிய செய்யுட்களின் வடிவில் வடித்துக் கொடுத்துள்ளார். அலங்காரக் கவி என்ற தமது உயரிய இருக்கையில் வீற்றிருந்து, “சொற்களும் அவற்றின் பொருள்களுமே காவ்யத்தை யாக்கும் பெற்றியன கருதுகிறார் மகாகவி மாகர். ஹிந்து-தர்ம-தர்சனம், எனக் பௌத்தமதக் கொள்கைகள், நாட்டியக்கலை, அணியிலக் கணம், வியாகரணம், சங்கீதம் முதலிய நுண்கலைகளில் அவருக்கிருந்த புலமை தலைசிறங்ததாகும் தமது மகா காவ்யத்தில், செய்யுள் தேவியைச் சிறப்பிக்கத் தமது முழு ஆற்றலையும் பயன்படுத்தியுள்ளார்.  

                        மாகரின் மகா காவ்யத்திற்கு ஆதாரம் பாகவத புராணமே. ஆராய்ந்து அழகிய சொற்களை அமைப்பதில் மாகர் வல்லுநர் ; வழிகாட்டும் ஆசிரியர். மாகரின் கருத்துப் படி, ஒரு நற்காவ்யத்தின் இலக்கணம் என்னவெனில் அது வக்ரோக்தி என்ற அணியினால் அழகு செய்யப் பெற்றதாய், சொல்லழகும் பொருட்சிறப்பும் செறிந்த அலங்காரமணிகளை யாருடைய தாய் இருத்தல் வேண்டும் என்பதாகும். இப்பெருங் கால்யத்தில் எண்ணிறந்த சமாசங்களும், சிறந்த வருணனை களும் விளங்குகின்றன. பலதிறப்பட்ட மலர்களால் தொடுக் கப்பட்ட மாலையைப் போல, இப்பெருங் காவ்யத்தில் பற்பல இடங்களில் தலையாய காவ்யத்தின் இயல்புகள் யாவும் ஏற்ற வகையில் இயங்குகின்றன. "கீதி சந்தம்" (முதற்பாதம் மூன்றாம் பாதங்களில் 12 அசைகளையும், இரண்டாம் நான்காம் பாதங்களில் 18 அசைகளையும் அமைத்துச் செய்யப்படும் செய்யுள் வகை) என்ற செய்யுள் நடையைப் பல இடங்களிற் பயன் படுத்தியுள்ள திலிருந்து, இவருடைய கலித்திறனும், பாராட்டும் பண்பும் வெளியாகின் றன. மாலினீ சந்தத்தைப் (ஒவ்வொரு பாதத்திலும் 15 அசைகளையுடைய செய்யுள்) பயன்படுத்துவதிற் பேராசிரியர் இவர். மகாகவி மாகர், மலைகள், பருவங்கள், நீர்விளை யாடல், திங்களின் எழுச்சித் தோற்றம், வைகறை போன்றவற்றைத் திறம்பட கவிமரபிற்குச் சேர, சொல்லோவியங்களாக நம்முன் நிறுத்துகின்ருர். ரைவதக பருவதத்தைப் பாங்குற வருணித் துள்ளமை பற்றி இவர் கண்டா மா கர் (மணிமாகர்) எனப் பாராட்டப்படுகிறார். ரைவதக பருவதத்தை யானையாக வும், அதற்கு இருபுறங்களிலுமுள்ள சூரிய சந்திரர்களை யானையின் இருபுறங்களிலும் தொங்கும் மணிகளாகவும் இவர் கூறியது, பண்டைய ஆராய்ச்சியாளரின் உள்ளங்களை உவகையாற் கவர்ந்தது. அது காரணமாக எழுந்த களிப்பின் மேம்பாட்டால், இவரை கண்டா மாகர்” எனப் பரிவுடன் பேசலாயினர்.

                          இங்ஙனமாக, மேலே சுட்டப்பட்ட இயல்புகளெல்லாம் நன்கு வாய்க்கப் பெற்ற கவிஞர் மாகர், அவருடைய கல்வி அறிவு ஆற்றல்களினால், ஸம்ஸ்க்ருத ஸாஹித்யம் என்னும் அகன்ற ஆகாயத்தில், வெள்ளி நட்சத்திரத்தைப் போல என்றும் பேரொளி பரப்பி விளங்கிக் கொண்டிருப்பார் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.



                                 ****************************

பாரவீ (भारवी)/BHARAVI

 

                                           பாரவீ (भारवी)

                    ஸம்ஸ்க்ருத ஸாஹித்தியத்தில், புகழ்பெற்ற புலவருள்ளே, பாரவிக்குத் தனிப்பட்ட சிறப்புடைய இடமுண்டு, பாரவியைப் பற்றி, "भावार्थ गौरवम्" ( பொருட் பெருமைக்குப் பாரவி''). என்று பலராலும் பெருமிதமாகப் பேசப்படும் புகழுரை யொன்றுண்டு. " उपमा कालिदास '- அதாவது, " உவமை களில் ஒப்புயர்வு அற்றவர் காளிதாஸர் என்பதைப் போலவே, பொருட்செறிவு- பொருள்களின் பெருமை பாரவியின் பெருமை. (भा+रवि:)= சூரியனது பேரொளி, உண்மையில், பாரவியின் பெருமை, சூரியனுடைய பேரொளிக்கு ஒப்பானதே.




                  பாரவி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். பாரவியின் காலம், ஏறக்குறைய இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு 634 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கருதப்படுகிறது மகா ராஷ்டிர மன்னனான விஷ்ணுவர்த்தனனுடைய அவைப்புலவராக இயங்கினார் பாரவி.

                 பண்டைய காலத்தில், மன்னர்கள், பேரரசர்கள் என்ற வர்களுடைய அவைக்களத்தில், காவியப் புலவர்களும் ஓவியக் கலைஞரும் இசைவல்லுநரும், எண்ணில்லாத ஏனைய நுண்ணிய கலையறிஞரும் போற்றற்குரிய இடத்தைப் பெற்றிருந்தனர். இக்காரணத்தால், பலகலைத் துறைகளில் தேர்ச்சியுற்ற அப்புலவர் பெருமக்கள், அரசர்களுடைய நெருங்கிய தொடர்பினால், தம்முடைய முழு ஆற்றல்களையும் நன்கு புலப்படுத்த ஏற்ற வாய்ப்புகளைச சாலவும் பெற்றிருக் தனர். பெரும்பாலான சம்ஸ்கிருதப் புலவர்கள், அரசர் களுடைய சபைகளை அலங்கரித்து வந்தார்கள். பாரவியும், பல்கலைப் பிரயனான தக்காண அரசன் விஷ்ணு வர்த்தன லுடைய அவைக்கண் தலைமைப் புலவராக விளங்கிஞர். அக்காளிலேயே அவரது பெரும்புகழ் தென்னிந்தியாவில் எங்கும் பரவியிருந்தது.

                     பாரவி, பேரும் புகழும் பெறுவதற்குக் காரணமாயிருந்த நூல், '' கிராதார்ச்சுனீயம் " என்பதாகும். அவரியற்றிய நூல் இஃதொன்றே. இதன் கண் பதினெட்டு சருக்கங்கள் இருக்கின்றன. இப்பெரிய காவியத்தில் காணப்படும் கதைப்பொருள்  மகாபாரதத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.

                கிராதார்ச்சுனீய கதைப்பொருள்

                     பேரரசர் யுதிஷ்டிரர், சூதாட்டத்தில் தோல்வியுற்று த்வைதவனம் என்னும் அரண்யத்தை யடைகின்றார். அங்கிருந்து வேடனொருவனை த் துரியோ தனனுடைய நாட்டிற்கு அனுப்புகிறார் அவன், துரியோதனனுடைய அரசாட்சி நிலையை நன்கறிந்து கொண்டு த்வைதவனத் திற்குத் திரும்ப வரவேண்டுமென்று ஆணையிடப்படுகிறான்.

                    அவ்வேடன், அவ்வாறே துரியோதனன் நாட்டிற்குச் சென்று அனைத்தையும் அறிந்து வந்து, யுதிஷ்டிரரிடம் பின் வருமாறு சொல்லலுற்ருன், " துரியோதனின் ஆட்சி முறை மாட்சிமையுடையதாக இருக்கிறது; அவனது ஆட்சி எவ்விதத்திலும் மகிழ்ச்சியைப் பயப்பதாகவும் நலந்தருவதா கவும் உளது .

                  இச்சமயத்தில், பீமனும் திரௌபதியும் யுதிஷ்டிரரைப் போருக்கெழுமாறு பெரிதுந்தூண்டினர்: ஆனால் அவர் சொன்ன சொல்லைத் துறந்து, அவ்வாறு செய்வதற்கு ஒப்ப வில்லை. இதனிடையில் பகவான் வேதவியாஸர் அவர்களி டத்துக்கு வந்தார். அப்பெரியார், அர்ச்சுனனை, இந்திரகீலம் என்னும் பருவதத்திற்கு அனுப்பிப் பாசுபதம் என் னும் பேராற்றல் வாய்ந்த அஸ்த்ரத்தைப் பெறுமாறு உபதேசித்து அருளினார். அர்ச்சுனன், ஆண்டுச் சென்று மாதவம் புரிந்து பகவான் சங்கானை மகிழ்ந்து, அவரிடமிருந்து பாபதாஸ்த் ராத்தைப் பெறவேண்டும்.

          அங்கனமே, அர்ச்சுனன், இந்திரகீல மலையையடகந்து செயற்கறிய அருந்தவத்தை மேற்கொள்ளுகிறான். அவனுடைய நிலையைக் கலக்கி, இடையூறு விளைவிக்க, விண்ணுலக மாதர் சிலர் மண்ணிடை வந் து அவன து கருத்தை வேறு படுத்தப் அர்ச்சுனன் பல்வகையாலும் முயல்கின்றனர். ஆனால் உறுதியான தன் தவநிலையிலிருந்து ஒரு சிறிதும் மாறுபடவில்லை. பின்னர், இந்திரனே, அர்ச்சுனன் தவஞ்செய்யும் இடத்திற்கு வந்தான். அவன், தன் மகன் அர்ச்சுனனை நோக்கி, " நின் குறிக்கோளை எய்துவதற்குச் சிவபெருமானை இடையறாது வந்தித்து வழிபட்டு அவனருளைப் பெறுவாயாக என அறிவுரை வழங்கி, ஆசீர்வதித்து அகன்றான்.

                இந்திரனுடைய அறிவுரையை மேற்கொண்டு, அர்ச்சு னன், சிவபெருமானையே இடையறாது சிந்தித்து வந்தித்து நின்றான். அர்ச்சுனனைப் பரிசோதிக்கக் கருதி பரமசிவன் கிராதன் (வேடன்) உருவந் தாங்கி வந்தான். அத்தருணத் தில், மாயப்பன் றி ஒன்று அர்ச்சுனன் மீது பாயப் பார்க் கின் றது. கிராதன் உருவந்தாங்கிய சிவபெருமானும் தவக்கோலத்திருந்த அர்ச்சுனனும் ஒரே காலத்தில் அப்பன் றியின் மீது அம்பு தொடுக்கின் றனர். அர்ச்சுனனால் தொடுக்கப்பட்ட அம்பு அப்பன்றியைக் கொன்று, விடுத்த வேலையை முடித்துப் பின்னர் நிலத்தினுள்ளே சென்றிட்டது. எஞ்சியிருந்த அம்புகாரணமாக, இருவரிடையே சொற்போர் எழுகிறது, அது மற்போர் விளங்கியது.

              அப்போரில், ஒருசமயம் அர்ச்சுனன் மேம்பட்டுக் காணப்படுகின்றான் ; ஒருசமயம் சிவனே சிறப்புறுகிறான் இறுதியில், இருவரும் தோளோடு தோள் கொடுத்துப்போர் புரிகின் றனர். சிவபெருமான், அர்ச்சுனனுடைய அஞ்சா மையும் ஆற்றலையுங் கண்டு களிக்கிறான் ; தனது வேட வடிவத்தைக் களைந்து, உண்மை உருவத்தைக் காட்டி பொருள் கின்றான். தோல்வி என்பதையே அறியாத, பேராற்றல் படைத்த பாசுபதாஸ்த்ரத்தை அர்ச்சுனனுக்கு நல்குகின்றான் சிவன், இவ்வாருக, அர்ச்சுன்னுடைய அருந்தவம் பெரும் பேற்றைப் பெற்று வெற்றிகரமாக முடிந்தது.

                    பாரவியின் தனிப்பெருங் காவ்யமாகிய " கிராதார்ச்சு னீயத்தில் , ஒருபெறுங் காவ்யத்திற் சிறப்புற அமைய வேண்டிய எல்லா அம்சங்களும் ஏற்ற வகையில் இடம் பெற்றுள்ளன இதன் கண் தலைசிறந்து விளங்குவது வீரரசமே ; எனினும் இன்பரசமும் இனிய முறையில் இடம் பெற்றுளது; ஏனைய ரசங்களும் விடப்பட்டில், ஏற்றவகை யில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

                   இப்பெருங் காவ்யத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் இது, "ஸ்ரீ" என்னுஞ் சொல்லுடன் தொடங்குகிறது. முதற் செய்யுளே பின் வருமாறு தொடங்குகிறது

                 श्रियः कुरूणांमधिपस्य पालनीं प्रजासु दृति यमयुंक्त वेदितुम् । 

                 स बर्णि लिङ्गी विदितः समाययौ युधि ष्ठिर द्वैतवने वनेचरः ।।

                  நம் கருத்தைக் கவரும் மற்ருெரு பொருள், ஒவ்வொரு சருக்கத்திலும் இறுதிச் செய்யுளில் "லக்ஷ்மி' என்னுஞ் சொல் பயின்றுள்ளது என்பதாகும். இதிலிருந்து நமக்கு இனிது புலப்படும் பொருள் ஒன்றுண்டு சாதாரணமாக சான்றோர் சொல்லும், பண்களானாவாரானார் எவன்", என்ற வாக்கியத்தை பெரிதும் படுத்தியுள் ளார் பாரவி மகாகவிஞர்.

                  கிராதார்ச்சுனியத்தில், இயற்கை வருணனை வெகு அழகாக அமைந்துளது. பருவங்கள், சந்திரோதயம் என்ற வற்றின் எழிந்சித்திரங்கள் நம்மாற் பல்காலும் பயிலத் தக்கவை நான்காம் சருக்கத்தில் குளிர்கால வருணனை வளம்பெற்றுள து அது நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளா திருக்கமுடியாது. ஐந்தாம் சருக்கம் இமயமலையின் கவின் கெழு காட்சி நிறைந்தது : ஆருஞ்சருக்கம் " யுவதி ப்ரஸ்தான”த்தைப் பற்றிக் கூறும் , எட்டாஞ் சருக்கம் சுராங்கனை யின் விஹாரத்தின் சிறப்பியல்புகளைச் சித்தரிக் கிறது; ஒன்பதாஞ் சருக்கம் சுரசுந்தரியின் சம்போகத்தின் தனிப்பட்ட தன்மையை விளக்கும்.

                   கவிஞர் பெருமானார், அணிகளைத் திறம்படக் கையாண் டுள்ளார். உவமை, சிலேடைகளின் ஆட்சி பெருஞ்சிறப்புடையது. சித்திர-காவ்யத்தின் படைப்பு கவியின் தனித் திறத்தை வியப்புற விளம்புகிறது. பதினைந்தாம் சருக்கம் முழுவதுமே, இதற்கோர் எடுத்துக்காட்டாக இயங்குகின்றது. எழுத்து ஒன்றை மட்டும் வைத்தே செய்யுளை அமைக்கும் ஆற்றல் அவரது கலையின் விழுத்தகைமையை விளக்கு கிறது


                   न नोननुलो नुन्नोनो नाना नानानना ननु ।

                   नुन्नोऽनुन्नो ननुतेनो नानेना नुन्नुन्नुत् ॥" (xv-14.)

                  கிராதார்ச்சுனியத்தில் அரசியல் விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. இதனால், பாரவி அரசியல் நுட்பங்களை நன்குணர்ந்திருந்தார் என்பது இனிது புலனாகிறது. பல்வேறு இடங்களில், பாரவியின் அனுபவ முதிர்ச்சியின் விளைவாகத் தோன் றிய பல கின் றன சீரிய கருத்துக்கள் பொலிவுடன் பிறங்கு பாரவியின் சீரிய மொழிகள், அரசியல்வாதிகள் பொன் னேபோற் போற்றிச்சான் றுகளாகப் பயன்படுத்தக் கூடிய பழமொழிகளாக விளங்குகின்றன.

                    பீமன், த்ரௌபதி, யுதிஷ்டிரர் முதலியோருடைய உரையாடல்கள் மிகவும் உயர்ந்த தன்மையன. தலைசான் ற அரசிளங் குமரர்கள் போன்றவர்கள் பயன்படுத்தும் பெற்றி யனவாகிய நற்கதை-உபகதைகளை நல்குகின்றது பாரவி யின் இப்பெருங் காவியம்.



                                  *************************

Saturday, January 23, 2021

காளிதாஸர்/KALIDASA


                                            காளிதாஸர்


            ஸம்ஸ்க்ருத ஸாஹித்தியத்தில் சிறந்த புத்தகங்கள் பலவற்றுள், மிகவும் மேன்மையாகக் கொண்டாடுவதற்கு உரியவை மகாகவி காளிதாஸரின் நூல்கள் அவை விலைமதிக்க இயலாத மாணிக்கத்தைப் போலத் தம் பேரொளியை எங்கும் பரப்பிப் பொலிகின் றன் அவற்றை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர் காளிதாஸர், நாடகங் களையும், சிறுகாவ்யங்களையும் (खण्ड काव्य) பெருங்காவ்யங் களையும் (महाकाव्य ) இயற்றியுள்ளார். இதனால், அவரது புலமை பல துரைகளிலும் விளங்கியது என்பது இனிது புலப்படும்.




                                                    பிறப்பு

           காளிதாஸருடைய பிறப்பைப் பற்றிய செய்திகள் பலவாறாகக் கூறப்படுகின்றன. சிலர், அவரை வங்காள - வாசி எனக் கருதுவர்; சிலர், அவரைக் காஷ்மீரத்தைச் சேர்ந்தவர் எனக் அவந்தி-மாளவம் கூறுவர் என சிலர் உரைப்பர் அவரது பிறப்பிடம் அவந்தியின் தலை நகரான உஜ்ஜியினியைச் சேர்ந்தவர் காளிதாஸர் எனவும் அவரது பிறப்பிடமும் அதுவாகவே இருத்தல் வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளரிற் பலர் எண்ணுகின்றனர்.

          காளிதாஸருடைய பிறப்பிடத்தைப் பற்றிக் கருத்து வேறுபாடு காணப்படுவது போலவே, அவரது வாழ்-காலத் தைப் பற்றியும் பலதிறப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன விக்ரமாப்தத்தின் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் காளிதாஸர் என ஒரு சாராரும், குப்தர்களுடைய காலத் தவரென ஒருசாரரும் விக்ரமாப்தத்தின் தொடக்கத்தில் விளங்கினார் அவர் எனப் பிறிதொரு சாரரும் புகல்வர்.

           விக்ரமச் சக்ரவர்த்தியின் பேரவையில் வீற்றிருந்த நவரத்தங்களிற் சிறப்புற்று விளங்கினார் காளிதாஸர் என்பது இந்தியப் பெருமக்களிற் பலரின் கருத்து. காளிதாஸருடைய நூல்களிலிருந்தும் இவ்வுண்மை இனிது புலப்படும் விக் .. மோர்வசியம் என்ற காளிதாஸ நாடகத்தின் தலைவன் (திகிரிமன்னவருள் ஒருவனான) புரூவனாக இருந்தபோதிலும் அதன்கண் காணப்படும், விக்ரமனைப் பற்றிய சில குறிப்பு களினால், காளிதாஸர், விக்ரம் து காலத்தவர் என்பது தெற்றென விளங்கும். எனவே, விக்ரம அரசரின் போவையை அணிசெய்த நவமணிகளில் நடுநாயகமாக விளங்கினார் புலவர் பெருந் தகை காளிதாஸர் என்பது நனி பொருந்துமாறு இனிது புலப்படும்.

             வரலாற்றுச் செய்திகளால், விக்ரமன், மாளவநாட்டு மன்னன் என்பது கொள்ளக் கிடக்கும், சகர்களைச் சமரில் வென்றபின்னர், அம்மன்னன், சகார்-சகர்களின் பகைவன் என்ற பெயரைப் பெற்றன். அப்போது தொடங்கிய ஆண்டு, " விக்ரம சகாப்தம்', என்ற பெயரால் அழைக்கப் பட்டது. இவ்வாராய்ச்சியின் பயனாக காளிதாஸரின் காலத்தை, கி.பி. முதலாம் நூற்றாண்டெனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.


                                காளிதாஸரின் நூல்கள்

                 ருது-சம்ஹாரம் ” (பருவங்களின் திரட்டு) என்னும் நூல், காளிதாஸரின் கன்னிப்படைப்பு எனக் கருதப்படு கிறது. இவ்விஷயத்தில், கல்வியாளரிடையே ஒருமைப்பட்ட கருத்தில்லை எனினும். காளிதாஸர் எழுதிய முதல் நூல் ருது சம்ஹாரம், (அன்றி) அது அவரது இளமைப் பருவத்தில் எழுதப்பட்டது என்ற கருத்து, பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தாகும்

                 இச் செய்யுள், ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது இதன்கண், ஆறு பருவங்களும் இனிது விளக்கப் பட்டுள்ளன. இங்கு, முதுவேனில் முதலாக, இளவேனில் சருகவுள்ள ஓராண்டின் ஆறு பருவங்களும் மிகத்தெள்ளிய எளிய, இனிய முறையில் வருணிக்கப்பட்டுள்ளன. இது கவிஞர் பெருமான் முதல் நூல் ஆதலின், அவருடைய ஏனைய நூல்களிற் காணப்படும், அருமை பெருமைகளை எழில் ஏற்றங்களை, பண்பு-திறமைப்பாடுகளை, இதனிடையே காம் காணுமாறு இல்லை


                                         குமார சம்பவம்

                குமாரசம்பவம் , என்னும் காவ்யம் காளிதாஸராற் செய்யப்பட்டதுதான் என்பதனை புல வரனைவரும், சிறிதளவும் ஐயப்பாடின்றி, ஒப்புக்கொள்கின்றனர். இதன் மாட்டு, பதினேழு சருக்கங்கள் இருக்கின்றன. குமாரகார்த்திகே யனது பிறப்பைச் சிறப்புற வர்ணிப்பதோடு, தமது காவ்யத்தை முடிக்கக் கருதினார் கவிஞர் பெருமானார் , ஆனால், அக்கருத்து நிறைவேருமையினால், காவ்யம் முற்றுப் பெற்றிலது.

                 இப்பெருங் காவ்யத்தில், பதினேழு சருக்கங்கள் (உட்பிரிவுகள்) உள்ளன. முதல் எட்டுச் சருக்கங்கள் மகா கவி காளிதாஸரால் இயற்றப்பட்டவையே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை : ஆனால், ஒன்பதாம் சருக்கத் திலிருந்து எஞ்சியுள்ள பகுதியை காளிதாஸர் எழுதினார் என உறுதியாக உரைக்க இயலவில்லை. இவ்வெஞ்சிய பகுதியை, அத்துணை நுண்ணிய புலமையைப் பெருத கவிஞரொருவர் எழுதிமுடித்திருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. காளிதாஸரின் நூல்களுக்குத் தெள்ளிய உரை வகுத்த, மல்லிநாதரும், முதல் எட்டுச் சருக்கங்களுக் கே தமது உரையை தீட்டினார் இஃதும், " குமரசம்ப வத்தின் முதல் எட்டுச் சருக்கங்களையே எழுதினார் காளிதாஸர் என்பதனை மேலும் வலியுறுத்துஞ் சான்றாகும்.

                  எடுத்துக்காட்டாக இயங்கும் திவ்ய தம்பதிகளான பார்வதி-பரமேஸ்வரர்களின் வருணனையும், பார்வதிதேவி யாரின் கடுந்தவக்கோலமும், சிவபெருமானது தெள்ளிய சிந்தனையின் சீரிய நிலையுமே, இக்காவியத்தின் தூய சுவை கெழுமிய பகுதிகள் என்பதனை யாவரும் அறிவர்


                         மேகதூதம் ("முகில்விடு தூது'')

                காளிதாஸருடைய நூல்களில், "மேகதூதம்" பொன்றாப் புகழ்வாய்ந்தது. வடமொழியில் மட்டுமே இதற்கு ஐம்பதிற்கு மேலாக உரைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றால் இதன் மேம்பாட்டைக் கூறவும் வேண்டுமோ இவையன் றியும், இதனைத் திபேத்தியரும் சிங்களவரும் தம் மொழிகளிற் பொறித்துக்கொண்டுள்ளனர் இக்காலத்தி லோ, நம்நாட்டிலும் பிறர் நாடுகளிலும் உள்ள பலமொழி களில் இதனை பெயர்த்துள்ளனர் இன் சுவையுணரும் மக்கள்.

             " மேகதூதம்" சுவிஞர்களுடைய பெரிதும் கருத்துக்களைப் கவரந்தமையால், காளிதாஸருக்குப் பிற்பட்ட கவிகள், "சந்தேகச்செய்யுள்' என்ற தனிப்பட்ட முறையே வகுத்திட முற்படுவாராயினர். சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் " மேக தூதத்தைப் " பின்பற்றி, "சந்தேச காவ்யத் தொடர் எழுவதாயிற்று

               மேக தூதத்திற் காணப்படும் காளிதாஸரின் வளமார்ந்த கற்பனை காட்சிகள், அவரது இயல்பான பெருமைக்குச் சான்று பகர்கின்றன. மேகத்தை தூதன் ஆக்கி யக்ஷன் ஒருவன், தனது பிரிவற்குமையால், இமயத்து உச்சியிலுள்ள யக்ஷர்களுடைய தலைநகரான அளகாபுரியில் இருந்து கொண்டு மிகவும் வருந்து கின் ற தன் காதற் கிழத்தியினி டத்துத் துன்பம் நிறைந்த தனது செய்தியைப் போக்கு கின்றான். அவ்ய க்ஷனும், தன் நாயகியின் பிரிவின் பொருட்டு தென் திசைக்கண் சேணெடுந்தூரத்திலுள்ள ராம்கிரியில் இருப்பவள் மிகவும் வருந்தி வாடுகிறான்.

                பரந்த விண்ணிற் சஞ்சரிக்கும் உயிரற்ற பொருளாகிய மேகத்தை (முகிலை)த் தூது விடுங்கால் கவிஞர் கூறுகிறார் :

           घूमज्योतिः सलिलमरुतां सन्निपातः क मेष: 

           संदेशार्थाः क पटुकरणैः प्राणिभि: प्रापणीयाः । 

           इत्यौत्सुक्यादपरिंगणयन्गुह्यकस्तं ययाचे

           कामार्ता हि प्रकृतिकृपणाश्चेतनाचेतनेषु ।

                 அதாவது, " புகை, மின்னல், நீர், காற்று என்றவற்றின் சேர்க்கையாலான அறிவற்ற மேகம் எங்கே. அறிவுச் சுடராய் இயங்கும் மக்கள் வழியாக அனுப்பப்பெறும் அர்த்தம் நிறைந்த செய்தி எங்கே? இவ்விரண்டிற்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை, (விண்ணிட்கும் மண்ணிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகள் உண்டு.) பெரு விருப்பினால் தூண்டப்பட்டவ னாக, அசேதனப் பொருளாகிய மேகத்தினிடத்து வரம்பிகந்து முறையிடுகிறான் அவ்யக்ஷன் இவ்வாறு குறையிரக்கக் காரணங் தான் யாது ? அன்புடை யாரைப் பிரிந்துத் துன்புறுகின்ற உள்ளத்தையுடைய ஒருவன், சேதனாசேதன அறிவுடைய அறிவில்லாத பொருள் களிடையே உள்ள வேறுபாடுகளைக் காண்பதற்கு இயலாத நிலையில் இருத்தல் இயல்போேயாகும்.

                  தூதுவர் மூலமாகக் காதற் செய்திகளை அனுப்பும் குறிப்புகள் ஸ்ரீராமாயணத்திலும் மகாபாரதத்திலுங் கூடக் காணக்கிடக்கின்றன. ஸ்ரீராமன், அநுமாரைச் சீதாபிராட்டி யாரிடம் தூதாக அனுப்பினான். இங்கு, அரக்கண் இரவாண னால் அபகரித்துச் செல்லப்பட்ட தேவியின் பால், இராம பிரானது தூய செய்தியைத் தாங்கிச் சென்ற அநுமான் அன்பினால், பக்தியிற் செறிந்த உள்ளம் படைத்த உத்தம ஊழியன். மகாபாரதம், நளன் தன் காதற்கருத்தைத் தமயக் தனிடம் தெரிவிப்பதற்கு ஓர் அன்னத்தை தூதுவிடுத்த செய்தியைக் கூறும். ஆனால், அசேதனப் பொருளாகிய முகிலை (மேகத்தை)த் தூது அனுப்புவதற்கு உரியவாயிலாகக் கொண்டது, மகாகவி காளிதாஸரின் புதிய அரிய கற்பனைத் திறமே.

             எவ்வகையாக நுணுகி ஆராய்ந்து பார்த்தாலும் மேகதூதம்” ஒரு தலைசிறந்த செய்யுள் (காவ்யம்) என்பது நன்கு போதரும். இதன் கண், "பூர்வமேகம்", "உத்தர மேகம்” என்ற இரண்டு பகுதிகளுண்டு. இக்காவ்யத்தில், காளிதாஸரின் கவித்திறமை மேம்பட்டு மிளிர்கின்றது. காளிதாஸரின் அற்புதப் படைப்பின் காரணமாக, காதலி யைப் பிரிந்த யக்ஷனும், காதலனைக் காணாத காரிகையும் என் றும் இறவாத் தன்மையைப் பெற்றுவிட்டனர். மேக தூதத்தைப் போன்ற காவ்யத்தை ஆக்கியமையால் ஸம்ஸ் க்ருத ஸாஹித்திய உலகிடையே இலகொளிவீசும் விளக்கினை க் காளிதாஸர் குன்றின் மேல் தூக்கியவர் ஆயினர்.


                   “ இரகுவம்சம் - (ரகுவின் மரபு)"

              " இரகுவம்சம் " ஒரு மகாகாவ்யம் (பெருங்காப்பியம்) இது, பத்தொன்பது சருக்கங்களைக் கொண்டது. இந்திய ஆராய்ச்சியாளரிற் சிலர் இதனைக் காளிதாஸரின் படைப்புக் கள் யாவற்றிலும் தலைசிறந்ததாகக் கொள்வர். வருணனை களைச் சற்றே உற்றுநோக்குவார்க்கு, ஆரிய அரசரின் சீரிய ஒழுக்க நெறியினைக் கண்கூடாகக் காண்டல்  கூடும்.

கவிஞர் பெருமான் பின்வருமாறு புகல்கின்றார் : 


                 सोऽहमाजन्मशुद्धानामाफलोदय-कर्मणाम् । 

                 आसमुद्रक्षितीशानामानाकरथव्मनाम् ।। 

                 यथा विधि हुतामीनां, यथाकामाचिंतार्थिनाम् । 

                 यथापराधदण्डनाम् , यथा कालप्रबोधिनाम् ।। 

                 त्यागाय संभृतार्थांनाम्, सत्याय मितभा षिणाम् ।

                 यशसे विजिगीपूणां, प्रजायै गृहमेधिनाम् ॥ 

                 शैशवेऽभ्यस्तविद्यानां, यौवने विषयैषिणाम् । 

                 वार्थ के मुनिवृत्तीनां, योगेनान्ते तनुत्यजाम् ॥ 

                 रघूणामन्वयं वक्ष्ये, तनुवाग्विभवोऽपि सन् ।

                 तद्गुणैः कर्णमागत्य, चापलाय प्रचोदितः ॥

                 तं सन्तः श्रोतुमिच्छन्ति (श्रोतुरमहेन्ति), सदसद्ग्यक्त हे तव: । 

                 हेन्नः संलक्ष्यते ह्यग्नौ विशुद्धिः श्यामि काऽपि वा ॥


              இவ்வாறே, ரகுவின் பிறப்பினைப் பற்றிப் பேசும் பகுதி யும் சுவைமிகுந்ததாகும். திலீபமன்னன், தன் இராணி சுதக்ஷிணையுடன், முனிபுங்கவர் வசிஷ்டரின் புனிதமான ஆஸ்மரத்தைச் சென்றடைகிருன். ஆண்டு, நந்தினி என்னும் தெய்வப் பசுவை வழிபட்டு அதன் அருளால் உலகம் போற்றும் உத்தமபுத்திரனாகிய ரகுவைப் பெறு கின்றான். ரகுவானவன் திக்விஜயஞ் செய்து, முந்தையோர் முறைப்படி, தனது முதுமைப் பருவத்தில் தனக்குரிய பொருள்கள் எல்லாவற்றையும், வழங்கும் வேள்வியினை மேற்கொண்டு முடிவில் தன் செல்வமனைத்தையும் தக்கார்க்கு ஈத்து இன்புறுகின்றான். அரசாங்க அலுவல்கள் அனையவற்றையும் தன் மகன் அஜனிடம் ஒப்படைத்துத் தன் வாழ்நாளின் எஞ்சிய பகுதியை, மட்கலங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மிக எளிய முறையில் கழிக்கக் கருதினான். இத்தகைய நிலையில், வரதந்து முனிவரின் மாணவன் ஆன கௌத்வின் என்பான் குவைக் காண்ப தற்கு கண்ணினன், தன் குருவிற்குத் தக்ஷிணையாகக் கொடுப்பதன் பொருட்டும் பதினான்காயிரம் பொற்காசுகள் நல்குமாறு சகுவை வேண்டி நின்றான். நல்ல குடியிற் பிறந்தவர் கல்கூர்ந்தார் (வறுமையுந்குர்) ஆனாலும் இரப்ப வர்க்கு இல்லை என்ற சொல்லைக் கூறமாட்டாரன்றே? தொல்குடியில் தோன்றிய, வரையாது வழங்கும் வள்ளலாகிய பருமன்னன் அவவெளிய நிலையிலும், தன் பேராற்றலின் வலிமையால் குபேரனிடம் இருந்து உரிய பொருளைப் பெற்று, கெளத்ஸனை மகிழ்வித்தான் என்ன ரகுவின் ஆற்றல் என்னே அவனது ஏற்றம் ! இது ரகுவின் வாழ்க்கையிற் பெரிதும் போற்றற்குரிய அருஞ்செயலாகும்.

                   அடுத்துவரும் சருக்கங்களில், இந்துமதியின் சுயம் வரத்தில் தீட்டப்பட்ட சுவின் கெழு காட்சிகளும், அஜன து புலம்பலில் நிறுத்தப்பெறும் உருக்குபோன்ற உள்ளத்தையும் உருக்கும் நிலைகளும், காளிதாஸரின் சிறப்பினை விளக்குவன ஆகும் கவித்திறத்தின்

                  பத்தாஞ் சருக்கக் தொடங்கிப் பதினைந்தாம் சருக்கம் வரை, ஸ்ரீராமபிரானுடைய வாழ்க்கை வரலாற்றை விரித் துரைக்கின் கார் கவிஞர் பெருமானார், பதின் மூன்றாம் சருக் சுத்தில், இலங்கையிலிருந்து புஷ்பகவிமானத்தில், அயோத் தியா நோக்கி வருகையில், ஸ்ரீராம பெருமான் தரும் புனிதத் கவரா க யெய விளக்கங்கள் நம் உள்ளங்களை இயலுமோ பதினான் காம் சருக்கத்தில் வரும் சீதாபிராட்டியாரின் வாழ்க்கைச் சித்திரம் சாலவும் தி து. இங்கு, இங்ஙனம், இந்தியப் பெண்மணி Gur அணியாகவும், விழுப்பம் தரும் ஒழுக்கம் அன்புகண்பு முதலிய கற்பண்புக்கெல்லாம் உறைவிடமாக வும் இருத்தல் கட்டுமென்பது இனிது விளக்கப்பட்டுள்ளது இவ்வாருக, இந்தியப் பண்பாட்டின் அருமை பெருமைகளைத் திறம்பட எடுத்துரைப்பதற்குக் காளதாஸரைப் போன்ற மலாகங்களால் மட்டுமே இயலும் என்பது உணரற்பாற்று.

                    இதன்பின்னர், பல மன்னர்களைப் பற்றிய சாதாரண குறிப்புகளே காணப்படுகின்றன. இறுதிச் (19-ஆம்) சருக்கத்தில், அக்கிவர்ணன் என்னும் ஒரு மன்னனைப் பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. அவன் சிற்றின்பத்தில் ஈடுபட்டவன் இப்பொருகாயும் ஏற்ற முறையில் எடுத்துக் காட்டுவதில் இருந்து எப்பொருளையுங் கூர்ந்து நோக்கும் கவியின் திறமை இனிது புலப்படுகின்றது.

                   இக்காவ்யத்தில், பல மன்னர்களின் நீண்டதொரு மரபு தோற்றம் அளிக்கிறது. இதனை ப் பரிசீலனை செய்தோமானால் பண்டைய பாரதப் பண்பாட்டின் விரிவான, விளக்கமுடைய விழுமிய ஓவியக்காட்சி காணப்படும்

                    இரகுவம்ச காவ்யத்தில், பலதிறப்பட்ட அழகொழுகும் பொருள்கள் அளிக்கப்பட்டுள்ளன அவற்றுள், மன்ன வனுக்கும் மக்களுக்கும் இடையே அக்காலத்தில் விளங்கிய இனிய நெருங்கிய தொடர்பு, அவநெறியை யறவே ஒழித்துக் தவநெறியை மேற்கொண்ட ஆன்றோர், முனிவரர்களின் தூய இருப்பிடங்கள், குருபக்தி, வலிமைவாய்ந்த சேனையின் நிலைமை, விஜய யாத்திரைகள் (வெற்றிச்செலவுகள்), பல்வகைப்பட்ட விருந்து, விருந்து விழாக்கள், எழில் நிறைந்த விசாலமான மன்னர்களுடைய போன் றவை சிலவாகும் மாளிகைகள் என்பன.

                     இவையேயன்றி, இக்காவ்யத்திடையே, பொறி - புலங்களின் அடக்கமுடமை தவ ஒழுக்கம் ஈகை பொறையுடைமை, நிலையற்ற உலகப்பொருள்களிடத்துப் பற்றற்ற தன்மை, வரையாது வழங்கும் (தாராள) மனப் பான் மை, என்றவைபோன் ற இந்தியப் பண்பாட்டின் அடிப்படையிலான பெற்றுள்ளன நற்பண்புகள் பலவும் விளக்கம்

                    வீரம், மெய்யன்பு, இரக்கம் என்றவை அன்ன உரிய உள்ளத்து உணர்ச்சிகள் பலவும் நலம்பட எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அன்றியும், நூல் முழுவதிலும், ஏற்ற இடங்களில் போற்றற்கு உரிய இனிய அணிகள் பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுருங்கச் சொல்லின், காவ்யம் காளிதாஸரின் பலதிறப்பட்ட கலைத்திறனைக் காட்டும் கவின் கெழு கருவூலம் (பொக்கிஷம்) என்று கருதப்படுமாறு காணக.


                                " மாளவிகாக்நிமித்ரம்"

                 காளிதாஸர் ஒரு கவிஞர் மட்டும் அல்லர்; தலைசிறந்த நாடக-ஆசிரியரும் ஆவர். அவர் மூன்று நாடகங்களை நல்கி யுள்ளார். அவற்றுள், மாளவிகாக்கிமிதரத்தில்” சுங்க மரபு மன்னன் அக்நிமித்ரனுக்கும் மாளவிகாவுக்கும் இடையே ஏற்பட்ட காதற்சித்திரம் படைக்கப்பட்டுளது. மாளவிகா-அக்கிமிதரர்களுடைய பழங்கதை, கருத்தைக் கவரும் வகையில் கூறப்பட்டுளது. அரசர்களுடைய அந்தப்புரங்களில் அடிக்கடி நிகழும் சச்சரவுகள், பரஸ்பரப் பொறுமைகள், மன்னனது சிற்றின்பச் சிறுமை, பட்ட மகிஷியின் போற்றற்குரிய பொறுமை, போன் றபொருள்கள் திறம்படக் குறிக்கப்பட்டுள்ளன. இந்நாடகத்தைச் செவ்விய முறையில் அமைத்துள்ளார் ஆசிரியர்.


                                         விக்ரமோர்வசியம் 

                    விக்ரமோர்வசியம், கவிஞர் தீட்டிய மற்றொரு நாடக மாகும். இருக்கு வேதத்திலும், சதபதப்ராஹ்மணத்திலும் இக்கதையைப் பற்றிய செய்தி காணப்படுகிறது. புரூரவன் என்பான் ஓர் ஆரிய அரசன் ; ஊர்வசி என்பாள் ஓர் ஆடர மகள் (தேவலோகத்து நாடக மகள்). கொடிய அரக்கன் ஒரு வன் ஊர்வசியை வலியக் கைப்பற்றிய ஈர்த்துச் சொல்லுங் காலத்து, ஆண்டுத் தோன்றிய புரூரவன், அவளை அவ்வரக் கன் கரங்களிலிருந்து மீட்டுப் பறந்தான் காத்த அக்காவ லனது கட்டழகைக் கண்ணுற்று, ஊர்வசி அவனைக்காதலித் தாள். சில நிபந்தனைகளுடன் மன்னனது மனைவியாயினாள், ஆனால், அவள் அவனை விட்டுப் பிரிய நேர்ந்தபொழுது, அவ்வரசன் ஆற்றொணாத் துயரினால் சித்தங்கலங்கிப் பித்தனாயினான். இங்ஙனம், தலைவியைப் பிரிந்த நிலையில் அம்மன்னன் வனத்திடையே அங்குமிங்கும் அலைந்து அல்லலுற்றான். காதற்பிணியாற் பீடிக்கப்பட்டுக் காவற் பணியை மறந்த மன்னனது நிலையைத் திறம்படக் காட்டு கிறார் கவிஞர் பெருமானார்.


                             " அபிக்ஞான சாகுந்தலம் "

           காளிதாஸரின் நாடகங்களுக்குள் அபிக்ஞான - சாகுந்தலம் தவச் சிறந்ததாகும். இது சார்பாக, சம்ஸ் க்ருதத்தில் பெருமையாகப் பேசப்படும் உரை ஒன்றுண்டு.


               काव्येषु नाटकं रम्यं तत्रापि च शकुन्तला ।

               तत्रापि च चतुर्थोङ्कस्तत्र श्लोकचतुष्टयम् ॥

           “காவ்யங்களுக்குள் களிப்பைத் தருவது நாடகம் : நாடகங்களுக்குள் நனிசிறந்தது சாகுந்தலம் அச் சாகுந்தலத்திடையே, மட்டில்லாத மமிழ்ச்சியைப் பயப்பது நான் காம் அங்கம் ; அங்கும், நான்கு செய்யுட்களோ உவகையின் உச்சிக்கே நம்மை உய்த்துச் செல்லும் பெற்றியன."


நாடகத்தின் கதைப்பொருள்

                  இந்நாடகம் ஏழு அங்கங்களைக் கொண்டது. முதலங் கத்தில், அத்தினாபுரத்து அரசனான துஷ்யந்தன், வேட்டை யாட வனத்தை நோக்கிப் புறப்படுகிறான். அக்கான கத்தே, கண்ணுவ முனிவருடைய ஆச்சிரமத்தில் சகுந்தலையைக் காண நேருகிறது. அவளுடைய தோழியர் வாயிலாக அவளுடைய பிறப்பு-வரலாற்றைச் செவியுற்ற துஷ்யந்தன் அவளைக் காதற் கண்ணுடன் காண்கின்றான்.

                   இரண்டாம் அங்கத்தில், ஆச்சிரம-வாசிகள், வேந்தனது பாதுகாப்பினை வேண்டி நிற்கின் றனர். வேந்தனும் அங்கேயே தங்க இசைகின்றான்.

                  மூன்றாம் அங்கம் அரசனுக்கும் சகுந்தலைக்கும் இடையே எழுந்த காதற்றொடர்பினைக் கூறுகிறது.

                   நான்காம் அங்கம் கருணா-ரசக் கடல், கண்ணுவ முனிவர் தமது தீர்த்த-யாத்திரையிலிருந்து திரும்பி வருகின்றார். அவர், வேந்தன் துஷ்யந்தனுக்கும் வனிதை சகுந்தலைக்கும் உள்ளத்து உதித்த காதல் உணர்ச்சியை யுணர்கின்றார். அவர் அவளை இகழவில்லை ; அகமகிழ்ந்து வாழ்த்துகிறார் ; அவளது அவலக்கவலையை நீக்கி அமைதி யை அளிக்கிறார் ; அவள் நெஞ்சத்து எழுந்த நாணத்தைக் களையப் பெரிதும் உதவுகிறார். சகுந்தலையை அவளது தலைவனது தலத்திற்கு அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடு கள் நிகழுங்காலத்தில், மெல்லியற் கொடிகளும் செடிகளும் வன் மரங்களும் வன் விலங்குகளும் இனப்பறவைகளும், முற்றத்துறந்த முனிவரது தெள்ளிய உள்ளமும் பெரிதும் ஏக்கமுற்றுக் கலங்குகின்றன. பிரிவாற்றாமையைப் புலப் படுத்தும் அரிய மெல்லுணர்ச்சிகளை உளங்கொளக் காட்டிய  காளிதாஸர் காலங்கடந்த பெரும்புகழைப் பெற்றார்.  இக்காட்சியைக் கண்ட கருங்கல் நெஞ்சமும் நெருப்பிட்ட  மெழுகாய் உருகாதிருக்க எங்ஙனம் இயலும்..

                     ஐந்தாம் அங்கத்தில் கண்ணுவ முனிவருடைய மாணவருடனும் கௌதமியுடனும் சகுந்தலை அத்தினாபுரியைச் சென்றடைகிறான் துருவாசருடைய சாபங்காரணமாக துஷ்யந்தன் சகுந்தலையையுணர முடியவில்லை. சகுந்தலையின் துன்பத்திற்கு எல்லையில்லை அத்தருணத்தில் அங்குத் தோன்றிய பேரொளியொன்று அவளை, மரீசி முனிவருடைய தூய உறைவிடத்திற்கு உய்த்துச் செல்கின்றது. அங்கு, அவள் தன் தாய் மேனகையுடன் காலத்தைக் கழிக்கிறாள்,

                    ஆறாம் அங்கத்தில், அரசன், தனது திருப்பெயர் பொறித்த கணையாழியை, மீனவன் ஒருவன் வழியாகப் பெறுகின்றான் இக்கணையாழி, துஷ்யந்த அரசனால் அவனது அன்பின் அறிகுறியாக அன்று ஆச்சிரமத்தில் சகுந்தலைக்கு அளித்ததாகும் அதனைக் கண்ட அளவில் சகுந்தலையைப் பற்றிய இன்பநிகழ்ச்சிகள் யாவும் நினைவிற்கு வந்தன. வரவே, துருவாச முனிவரின் சாபங் காரணமாக சகுந்தலையின் திறத்துத் தான் இழைத்த தீமைகளை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாயினான். இத்தருணத்தில் துஷ்யந்தன், இந்தரனுக்கு உதவியாக தேவலோகஞ் செல்ல நேர்ந்தது.

               ஏழாம் அங்கத்தில், வெற்றிவீரனான துஷ்யந்தன், தேவருலகத்திலிருந்து தன் நாடு திரும்புகிறான். வரும் வழியில், மரீசீமுனிவரின் தூய இருக்கையைக் காண்கிறான். அங்கு தன் மகனான பரதன் த் தன் கண்களாற் கண்டு களிக்கிறான். அவ்வமயத்தில், முனிவரின் சாபத்தின் வஞ்சனையால் நெடுங்காலம் பிரிந்திருந்த, நெஞ்சிற்கு இனிய நல்லாள் சகுந்தலையை மறுபடியும் பெறுகிறான், நீண்ட காலத்துப் பிரிவின் பின்னர் மீண்டும் ஒன்றுசேர்ந்த காட்சி கவின் கெழு விண்ணுலகக் காட்சியாகும் இங்கு, மரீசி மகரிஷியின் மங்கலவாழ்த்துடன் நாடகம் இனிது முடிகிறது.

                     தமது ஸம்ஸ்க்ருத ஸாஹித்திய  வரலாற்றில்  (History of Sanskrit Literature) காளிதாஸரைப் பற்றி மிகச் சிறப்பாகச் சீர்தூக்கிப் பாராட்டியுள்ளளார் பலதேவ உபாத்தியாயர். அவர் பின்வருமாறு கூறுகிறார்.

                     " காளிதாஸருடைய நூல்கள் ஸம்ஸ்க்ருத மொழிக்குப் பேரணி செய்கின்றன. உள்ளத்திற்கு உவகையை ஊட்டும் இனிமை, தெள்ளத் தெளிந்த நடையின் ஒள்ளிய ஒழுக்கு, ஆய்ந்தாய்ந்து அமைக்கப்பட்ட சொற்களின் அழகு, அவற்றின் பொருட்செறிவு (அர்த்தரிஷ்டி), அவற்றை அணிகளின் வளமை, ஒரு மகாகாவ்யத்திற்கு இன்றியமை யாத ஏனைய பண்புகள் என்ற இவையாவுமே காளிதாஸ ருடைய நூல்களில், ஏற்ற இடம் பெற்றுத் தலைசிறந்த வகையிற் பொலிகின்றன.

                       காளிதாஸர், இந்தியப் பண்பாட்டை விளக்கும் கவிப் பிரதிநிதி இந்தியத் அவர் படைத்துள்ள தன் மையை பாத்திரங்கள் யாவும் எடுத்து இயம்பும் பெற்றியன எவருடைய கவிதைகளில், அன்றாட வாழ்க்கையிற் காணப் படும் சிக்கலான நுண்ணிய நிகழ்ச்சிகளைத் திண்ணிய வகையில் உணர்ந்துத் தீர்வு நல்குந்திறம், செவ்விய முறையிற் சாலவுங் காணப்படுகிறதோ, அவரே உலகம் போற்றும் உத்தமக் கவியாகும் வித்தகம் படைத்தவராவர். காளிதாஸரின் பெருமை இதன்கண்ணே அமைந்துளது. காளிதாஸருடைய காவ்யங்களில், இந்திய சமூகப் பண்பாட் டின் உண்மையான வடிவம் வெளிப்பட விளங்குகிறது அவருடைய நாடகங்களில்  அது பொலிவுடன் நடனம் புரிகின்றது.

                       கூறுவான் எடுத்துக் கொண்ட கதைப்பொருளின் சிறப்பும்,    அதனை உரைக்கப் பயன்படுத்தும் நடையின் திறமும் தம்முள் இணைந்து இலங்குவதிலே காளிதாஸரின் தனிப்பட்ட தன்மை விளங்குகிறது காளிதாஸர், சில சொற்களைக் கொண்டே, தாம் கூறக் கருதிய பெரும்பொருளைப் புலப்படுத்துகிறார்; ஆனால் ஏனைய புலவர்களோ பலதிறப்பட்ட சொற்களைக் கொண்டும் அத்துணை வெற்றியைப் பெற்றிடும் ஆற்றல் அற்றவராக வே காணப்படுகின்றனர். அவர் எதைத் தொடினும் அதனைச் சுடர்விட்டு இலங்கச் செய்கிறார்; அவர் தொட்டன வெல்லாம் மாற்றரியாத செழும்பகம் பொன்னாக ஏற்றம் பெற்று போற்றப்படுகின்றன. பொருந்தும் பொருள்களை உய்த்துணரும் கூர்மையுடையவர் கவிஞர் பெருமானார், எவ்வெவ் வணர்ச்சிகளை எவ்லெச் சொற்களைப் பயன் படுத்தினால் நிறமுற, திறம்படச் செவ்விய முறையில் புலப் படுத்தக்கூடும் என்பதனை நன்குணர்ந்திருக் தார் காளிதாஸர், அத்தகைய உணர்ச்சிகளை ஏற்ற இனிய சொற்களால் எடுத்துக்காட்டி, தங்கருத்துக்களைத் தெள்ளத் தெளியப் புலப்படுத்துகிறார்.

                      காளிதாஸருடைய நூல்களில், உள்ளத்தைப் பற்றிய பொருள்களுக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. மாறு படும் மக்களின் உள்ளங்களின் கூறுபாடுகளை யுணர்வதில் காளிதாஸருக்குத் தனிப்பட்ட ஆற்றல் உண்டு , உணர்ந்த வாறே உறைக்கவும் திறமுண்டு. உலகப்பொருள்களை ஓர்ந்துணர்வதில் அவருக்கிகுந்த ஆற்றல் அகலமும் உடையதாகும் உணர்ச்சிகளின் நுண்ணிய உட்பொருளை நுகர்ந்து நோக்கும் பெற்றி அவர் மாட்டுத் தனிப்பட்ட முறையில் வாய்ந்திருந்தது. ஆருந்தவர்த்தனர் என்பாரும், ஜர்மன் கவியர் கேடே என்பாரும், காளிதாஸரு டைய கருத்துக்களின் வளமார்ந்த விழுப்பத்தை, ஒருவாக் காக, வானுறப் புகழ்ந்து துரைக்கின்றனர்.

                     காளிதாஸர், ஒரொப்பற்ற பெருமையைப் பெற்ற பெருங்கவிஞர் அவருடைய காவ்யங்களின் கடையின் வடிவத்தை அவரே வடித்துக் கொடுத்துள்ளார். இனிய முறையில், தம்முடைய அரும்பெருங் கருத்துக்கள் எளிய எழிலார்ந்த வழிகளிடையே உய்த்துச் செல்லுவதற்குக் காளிதாஸர் ஏற்ற அணிகளைத் தக்காங்கு பயன்படுத்தி யுள்ளார் மக்களிடையே பெரிதும் வழங்கிவரும், "ISRT கரிகாலா' ("உவமைகளுக்குக் காளிதாஸர் என்ற புகழுரை மிகவும் பொருத்தமுடையதே. உலகத் துள்ளும் இயற்கையிடையிலும் எளிதிற் கட்புலனாகாத நுண்ணிய பகுதிகளிலிருந்துத் தேர்ந்து எண்ணி எடுத்தவை காளிதாஸ ருடைய உவமைகள், அவை, எடுத்துக்கொண்ட பொருளைத் திறம்பட வுணர்த்தவும், காவ்யத்தின் காம்பீர்ய தோற்றத் தைப் புலப்படுத்தவும் போற்றல் பெற்றவையாகும். இவ்வுவ மைகள், உலகத்தின் அகத்திருந்தும் புறத்திருந்தும் திறம் படத் திரட்டப்பட்டவை ஆதலின் தனிப்பட்ட ஆற்றலும் எழிலும் பெரிதும் உடையவை.

                           உள்ளத்து நிகழும் உணர்ச்சிகளைத் திறம்பட எடுத்துரை  ப்பதிலும் காளிதாஸர் ஒப்பும் உயர்வும் இல்லாதவர். காதலர் களுடைய இன்பச் சேர்க்கையை விரித்துரைப்பதிலும் அவர்களுடைய துன்பப் பிரிவை விரிவாக விளக்குவதிலும் ஒத்த ஆற்றலுடையவர் காளிதாஸர், தன் தலைவனான மதனை (மன்மதனை) இழந்துழி, இரதியின் புலம்பல் (குமாரசம்பவம் நான்காம் சருக்கம்), என்றுமே திரும்பிவராத வகையில் உயிர்நீத்துச் சென்றிட்ட இந்துமதியைக் குறித்து வெந்துய ரால் வருந்திய அஜன் புலம்பல் ; (ரகுவம்சம்-எட்டாஞ் சருக்கம்), என்ற இவ்விரண்டும் கருணாசத்தை பூர்ண மாகப் புலப்படுத்துகின்றன. தன் காதற்-கிழத்தியைப் பிரிந்த யக்ஷனொருவன் விரக வேதனையால் துன்புற்றுத் தன் தலைவின்பால் மேகத்தை தூதுவிடுத்தல், காளிதாஸரின் தனிப்பட்ட கற்பனைத் திறத்திற்கு ஓரெடுத்துக்காட்டாகும். தலைவனைப் பிரிந்து வாடும் பக்ஷன் மனைவியின் நிலையைக் கூறும் பகுதி " இரக்கவுணர்ச்சி”யை எழுப்புகின் றது இதனைப் படிப்போருடைய உள்ளங்கள் கருணையாலும் துன்பத்தாலும் நிறைந்தவை யாகின்றன.


         காளிதாஸரின் சந்தேசம்

               தெய்வங்களிடத்திலும் பிராஹ்மணர்களிடத்திலும் பரம பக்தி, தப்பாமற் பலிக்கும் குருவின வாக்யத்தில் அசைக்க முடியாத முழுநம்பிக்கை, தாயனத் தகும் பசுவிற்குச் செய்யும் பணி, விருந்தினரின் விருப்பத்திற்கு இணங்கத் தன் செல்வம் அனைத்தும் நல்கும் வேந்தனின் கொடைத்திறம் மக்களின் மனத்திற்கு மகிழ்ச்சியைப் பயப்பதற்காக பேரன்புவாய்ந்த மகனைவியையுந் துறக்கத் துணியும் பண்பு, என் றவை போன்ற தன்மைகளெல்லாம் காளிதாஸரின் (கதா) பாத்திரங்களைப் பொலிவுறச் செய்கின்றன. தாஸர் காலத்திய ஜன சமூகம் (சமாஜம்) சுருதி, ஸ்மிருதி களின் தூய நெறியில் அமைக்கப்பட்டதாகும் காளி மன்னன் பொருளை ஈட்டுவதெல்லாம் வறியார்க்கு வழங்குவதன் பொருட்டே , மறந்தும் தன் சொல்லின்கண் சோர்வும் பொய்யும் வாராமற் காப்பதற்காகவே அளவறிந்து சொற் களைப் பயன் படுத்துகிறான் வேந்தன் ; மன்னு புகழை யுன்னி மன்னன் போரிற் புகுகின்றானே யன்றி, வென்றியின் பொருட்டு அன்று; மனை மாட்சிக்கு நன்கலமாகிய மக்களைப் பெறுவதற்கே இல்லறத்தை அரசன் மேற்கொள்கின்றானே அல்லா து, நொடிப்பொ ழுதில் மடியுந் தன்மைத்தாய சிற்றின்பத்தின் நுகர்ச்சிக்காத அல்ல. அறத்தொடு மாறு படாத திறத்தை உடைய விருப்பங்களையே அரசன் போற்று கிறான். அறத்தொடு தொடர்பில்லாத செயல்களெல்லாம் அறவே களையற்பாலன காளிதாஸர் நம்பொருட்டு விடுத்துள்ள அரும்பெருஞ் செய்தி தகரத்தை ('த' 22 என்னும் எழுத்தை) முதலிற் கொண்ட மூன்று மொழிகளே யாகும் ; அவை த்யாகம்'', “ தவம் தபோவனம் 22 39 என்பனவாகும். ("வேண்டின் உண் டாகத் துறக்க, துறந்த பின்-ஈண்டியற் பால பல", "வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டில்லை - யாண்டும் அஃதொப்பதில்'', "தவஞ் செய்வார் தங்கமருஞ் செய்வார்மற் றல்லார்—அவஞ்செய் வார் ஆசையுட் பட்டு”, என்ற திருக்குறள் இங்கு கருதல் பாலன.)

                     தபோவனத்திடையே பிறந்து வளர்ந்து வளம் பெற்ற பண்பாடே மன்பதைக்கு (மக்கட்கு) மகிழ்ச்சியை நல்க வல்லது தூயதன்மைத்தாய தியாகத்தினாலேதான் மாயத் தன்மையுடைய தன்னலத்தைப் போக்க முடியும் உலகத்தில் உண்மையான உவகை-வாழ்க்கை ஓங்க வேண்டுமாயின் அது தவத்தின் திறத்தாலேதான் இயலும் (“வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் - ஈண்டு முயலப்படும்”-திருக்குறள்) இமைப்பொழுதிற் பொன்னும் இம்மக்கள் உலகத்திற் பிறந்தபின்னர், என்றும் பொன்றாப் பெருவாழ்வைப் பெற உன்னுவார்க்கு, உலகப்பொருள் களிடையே உழன்று பொறி-புலங்கட்கு அடிமைப்பட்டுக் கிடத்தல் கூடாது ; வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவனிடத்து எல்லையில்லாத பக்தியினாலும், வேண்டிய 160 வற்றை வேண்டியபடி விளைவிக்கும் யோக சக்தியினாலும் தன் னை”யுணர்ந்து CGI பிறப்பொன்றும் பேதைமையை ஒழித்து, சிறப்பென்னும் செம்பொருளைக் காணவேண்டும். தன்னையறியத் தனக்கொரு தீங்கில்லை தன்னையறியாமல் னே கெடுகின்றான்- தன்னை அறியும் அறிவை அறிந்த பின்-தன்னையே யர்ச்சிக்கத் தானிருந்தானே” என்ற  திருமந்திரப் பாசுரப் பகுதியைப் பார்க்க, காளிதாஸரின் படைப்புக்கள் (காவ்யங்கள்) நுண்ணிய அருங்கலைக் கண் கொண்டு காணுங் காலத்து மட்டும் களிப்பினையளிக்குங் காட்சியன அல்ல ; பின்னர், தன்னையும் தலைவனையும் ஓர்ந்து உணரும் உள்ளத்தோடு நோக்கினாலும் பெரும் பயனைப் பயனப்பன ஆகின்றன. இதற்குக் காரணம் யாது காளிதாஸர், இந்தியக் கலையின் தலைசிறந்த மேம்பாட்டைப் போற்றும் புலவர் மட்டும் அல்லர் : இந்தியப் பண்பாட்டிற்கு விளக்கந்தரும் விழுத்தகையாகும் ஆவர் என்க.


                            *****************************


Thursday, January 21, 2021

Sanskrit - Conversational Sanskrit /Common formulas

                          

                                              Sanskrit - Conversational Sanskrit 

                                                    शिष्टाचारः Common formulas


हरिः ओम् ।                        Hello

सुप्रभातम्/नमस्ते नमस्कारः।   Good morning /good afternoon/good evening.

शुभरात्रिः ।   Good night.

धन्यवाद।      Thank you,

स्वागतम् ।    Welcome

क्षम्यताम्।         Excuse/pardon me,

चिन्ता मास्तु ।   Don't worry.

कृपया।              Please

पुनः मिलामः ।  Let us meet again.

अस्तु ।              All right/0.K.

श्रीमन् ।            Sir

मान्ये/आर्ये।           Madam.

साधु साधु/समीचीनम् ।  Very good.



            मिलनम् - Meeting


भवतः नाम किम् ?     What is your name ? (masc )

भवत्याः नाम किम् ?   What is your name ? (fem.)

मम नाम..........          My name is..........

एष:सम मित्रं......    This is my friend......

एतेषां विषये श्रुतवान् । I've heard of him,

एषा मम सखी.......   This is my friend........

भवान् किम् (उद्योग) करोति ? }What do you do ?

भवती किम् (उद्योग) करोति ? }


अहं अध्यापकः अस्मि । (पु.)  } I am a teacher   

अहं अध्यापिका अस्मि । (स्त्री). } 

 (fem. masc.)


अधिकारी    Officer    उट्टङ्ककः   Typist

तन्त्रक्षः    Engineer   प्राध्यापकः Professor

लिपिकः   Clerk         न्यायवादी   Lawyer

विक्रयिकः  Salesman उपन्यासकः  Lecturer

 

अहं यन्त्रागारे कार्य करोमि ।   I work in a factory.


कार्यालये          in an office 

महाविद्यालये     in a college

वित्तकोषे          in a bank 

चिकित्सालये     in a hospital 

प्रौढशालायां      in a high school 

यन्त्रागारे           in a factory


भवान् / भवती कस्यां कक्ष्यायां पठति ?

Which class are you in ?

अहं नवमकक्ष्यायां पठामि ।

I am in Std. IX

अहं I/II/III/B.Sc. कक्ष्यायां पठामि ।

I am in I/II/III/B.Sc. Class.

भवतः ग्रामः ?

Where are you from ?

मम ग्रामः.......

I am from...



कुशलं वा ?          }       How are you ?

कथमस्ति भवान् ? }

गृहे सर्वे कुशलिनः वा ?   Are all well at home ?

सर्व कुशलम् ।                All is well.

कः विशेषः ! /का वार्ता ?   What news?

भवता एवं वक्तव्यम् ।       You have to say.

कोऽपि विशेषः ?              Anything special ?

भवान् / भवती कुतः आगच्छति ?

Where are you coming from ?


अहं शालातः }

      गृहतः    }  आगच्छामि  I am coming from

        तः       }

भवान् / भवती कुत्र गच्छति ? Where are you going ?

भवति वा इति पश्यामः ।    Let us see if it can be done.

ज्ञातं वा?                     Understand ?

कथम् आसीत् ?           How was it ?

अङ्गीकृतं किल ?          Agreed ?

कति अपेक्षितानि?        How many do you want ?

अद्य एव वा ?              Is it today ?

इदानीं एव वा ?            Is it going to be now ?

आगन्तव्यं भो।             Please do come.

तदर्थ वा?                   Is it for that ?

तत् किमपि मास्तु ।       Don't want that.

न दृश्यते?                    Can't you see ?

समाप्तं था ?                Is it over ?

कस्मिन् समये ।            At what time ?

तथापि........ ।              Even then

आवश्यक न आसीत् ।    It was not necessary

तिष्ठतु भोः ।                 Be here for some more time,

स्मरति किल ?              Remember, don't you ?

तथा किमपि नास्ति।       No, it is not so,

कथम् अस्ति भवान् ?     How are you ?

न विस्मरतु ।                Don't forget

अन्यच                        Besides....

तदनन्तरम्......              Then.....

तावदेव किल? .....        Is it only so much ?

महान् सन्तोषः ।           Very happy about it.

तत् तथा न।                 It is not so

तस्य कः अर्थः ?            What does it mean ?

आम् भोः                    Yes, dear/sir..

एवमेव                        Just...

       देवालयं    }

अहं  कार्यालयं  }   गच्छामि । I am going to--

        विपणि    }

किं चिराद् दर्शनम् ?           {  What is the matter ?

                                     { You are not seen these days.

भवन्तं कुत्रापि दृष्टवान् ।     I remember to have seen you some where.

भवान् सम्भाषणशिबिरं आगतवान् वा ?

Have you come to the conversation camp ?

तहि कुत्र दृष्टवान् ?              In that case where have I seen you ?

तर्हि तत्रैव दृष्टवान् ।          I must have seen you there in that case.




Sanskrit Names of Medicinal Plants (herbs)

      Sanskrit Names of  Medicinal Plants (herbs) English Name         Sanskrit Name 1. Aconite     Vatsanaabha 2. Adlay / Jobs tears       ...